உடுமலை, டிச.31- மடத்துக்குளம் தாலுகா பேருந்து நிலையம் தனியார் வாகனங்கள் நிறுத் தும் இடமாகவும், குப்பை கிடங்கு போல் குப்பைகளை கொட்டுவதாலும் பயணி கள் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந் துள்ளது. பொள்ளாச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மடத்துக் குளம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் பல ஆண்டுகளாக வரா மல், தேசிய நெடுஞ்சாலையில் நின்று செல்வதை கண்டித்தும், பராமரிப்பு பணிகளை செய்யக்கோரியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட் டம் நடத்தினர். இதையடுத்து, பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டது. மேலும், இவ்வழி யாக செல்லும் அனைத்து வெளி மாவட்ட பேருந்துகளும் உள்ளே வந்து செல்கிறது. இப்படி பல போராட்டங்க ளால் நடைமுறைக்கு வந்த பேருந்து நிலையம், தற்போது குப்பை மேடாகவும், தனியார் வாகன நிறுத்தும் இடமாகவும் மாறி உள்ளது. இதனால், பேருந்துகள் உள்ளேயும் வெளியே செல்ல முடியாமலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் எந்த பேருந்து எங்கு நின்று செல்கிறது என்று குழப்பத்தை ஏற்படுத்தும் வித மாக குப்பைகளும், தனியார் வாகனங் களின் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. இது குறித்து பயணிகள் தெரிவிக் கையில் பல போராட்டத்திற்கு பிறகு இப் பொழுது தான் சர்வீஸ் வண்டிகள் பேருந்து நிலையத்தின் உள்ளே வருகி றது. ஆனால் கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் எங்கு நின்று செல்கிறது என்று தெரியாமல் இருக்கும் வகையில் தனியார் கார் மற்றும் வேன்கள் பேருந்து நிலையம் முழுமைக்கும் நின்றுள்ளன. இதனால் பயணிகள் பேருந்துகளில் ஏற முடியாமல் அவதிக்கு உள்ளாகின்ற னர். இந்த பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்குச் செல்ல முடியாத வகையில், தனியார் வாகனங் கள் ஆக்கிரமித்துள்ளன. மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்ப றைகளை பயன்படுத்த முடிவதில்லை. இதில், தண்ணீர் வருவது இல்லை. எந்த கழிவறைக்கும் கதவுகள் இல்லை. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட கழிவறையும் பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளன. எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத் தில் உள்ள பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள னர்.