districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இலவச மனைப்பட்டாவிற்கு இடம் தேர்வு

நாமக்கல், செப். 7- குமாரபாளையத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க  இடம் தேர்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் சனியன்று  ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள  பல்லக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது ஒசுவாங்காடு  காலனி. இப்பகுதியில் உள்ள மக்கள், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்ற னர். நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் அரசுத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு வழங்கி வந்தனர்.  இந்நிலையில், சனியன்று நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவ லர்  சுமன், வட்டாட்சியர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர்  கோவிந்தசாமி ஆகியோர் இலவச வீட்டுப்பட்டா வழங்கும் பகு தியை நேரில் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து அம் மக்களிடம் அதிகாரிகள் பேசுகையில், பத்து நாட்களுக்குள் வீட்டு மனை பட்டாவிற்கான கோரிக்கைகைள் தீர்வு காணப் படும் என்றனர்.

கடன் தொல்லையால் தற்கொலை கூடாது

நாமக்கல், செப். 7- கடன் தொல்லையால் தற்கொலை கூடா தென வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி  நடத்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளை யம் பகுதி பொதுநல அமைப்புகள் முடிவெ டுத்துள்ளது.  குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு  சாலையில் பழைய பத்திரப்பதிவு அலுவல கம் எதிரே பொதுநல அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளியன்று நடை பெற்றது.  குமாரபாளையத்தில் ஏராளமான விசைத் தறிக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது விசைத்தறி தொழிலில் ஆண் பெண் தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விசைத் தறி தொழிலில் போதிய வருவாய் இல்லாத  காரணத்தினால் நுண் நிதி நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியவற்றில் கடன் பெறுகின்றனர். இந்நிலையில், கடன் பெற்றுள்ள விசைத் தறி தொழிலாளர்களை, பெண்களை கடனை வசூலிக்க வருபவர்கள், மன ரீதியிலான அச்சுறுத்தல்கள் ஏற்படுத்துகின்றனர். இத னால், பாதிக்கப்பட்டவர்களை தற்கொலை செய்யும் அளவிற்கு  தள்ளுவது, தவறான பாதையில் சென்று கடனை அடைக்க பெண் களை நிர்பந்திப்பது போன்றவை சமீப கால மாக அதிகரித்து வருகிறது. இதை முற்றாக தடுப்பது குறித்தும், எதிர்காலத்தில் கடன்  தொல்லையால் தற்கொலை என்பதை  தவிர்த்து, சட்ட ரீதியான அணுகுமுறைகளை  பொதுமக்களும் பெண்களும் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகை யில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.  இதில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகி கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவுக்  குழு பிரதிநிதிகள் என பலர் கலந்து விவாதம்  நடத்தினர். இதில் வருகிற வியாழன்று குமார பாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் இருந்து வட்டாச்சியர் அலுவல கம் வரை விழிப்புணர்வு பேரணி நடத்து வது எனவும், விசைத்தறி தொழிலாளர்களின்  நிலை குறித்து அரசுக்கு விரிவான மனுக் களை அனுப்பி நடவடிக்கை எடுக்க கோரு வது என முடிவெடுக்கப்பட்டது.  சமூக ஆர்வலர் பஞ்சாலை சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோ சனைக் கூட்டத்தில்  ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

புதிய திட்டப்பணிகள் அமைச்சர்கள் துவக்கி வைப்பு

புதிய திட்டப்பணிகள் அமைச்சர்கள் துவக்கி வைப்பு திருப்பூர், செப்.7 தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொளத்துப்பாளை யம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 49 புதிய திட்டப்பணி களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்து, முடிவுற்ற  திட்டப்பணிகளை திறந்து வைத்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், தொப் பம்பட்டி  ஊராட்சிக்குட்பட்ட 11 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50  லட்சம் மதிப்பீட்டில் ரூ.38.50 லட்சம் மதிப்பீட்டிலான கலைஞ ரின் கனவு இல்லம் திட்டத்திற்கான ஆணைகள் உட்பட ரூ.39.73 கோடி மதிப்பீட்டில் 49 புதிய திட்டப்பணிகளை தமிழ்  வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி  செல்வராஜ் ஆகியோர் வெள்ளியன்று துவக்கி வைத்து,  முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், கொளத்துப்பாளை யம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்பசாமி, துணை தலைவர்  கே.கே.துரைசாமி, தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் எத்திராஜ், கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவ லர் நகராஜன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்  துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள். 

குட்காப் பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது
 

குட்காப் பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது கோவை, செப். 7- சரவணம்பட்டி பகுதியில் குட்காப் பொருட்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியில் குட்காப் பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகர போலீசார் நட வடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ் தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வன் கிரி என்பவர் அங்கி ருந்து குட்காப் பொருட்களை கொண்டு வந்து விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் சனியன்று சர்வன் கிரியை வோல்ஸ்வே கன் காருடன் பிடித்தனர். அப்பொழுது 500 கிலோ குட்காப் பொருட்கள் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் இருக்கும் என  காவல் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து குட்காப் பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யபட்டது. சர்வன்கிரி மற்றும் ராம்குமார் ஆகிய இரு வரையும் போலீசார் கைது செய்தனர்.

யானைகள் பாதுகாப்புக்கான ஆலோசனை கூட்டம்

கோவை, செப்.7- தென்னிந்திய யானைகள் பாதுகாப்புக் கான ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்ற னர். தென்னிந்தியாவில் வாழும் யானைக ளின் எண்ணிக்கை குறைந்து வருவதும், மனித-யானை மோதல்கள் அதிகரித்து வரு வதும் கவலைக்குரியதாக இருந்து வருகி றது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்  வகையில், ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள்  இணைந்து கோவை மாவட்டம், தனியார் விடு தியில் வெள்ளியன்று யானைகள் பாதுகாப்பு  தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு, தென்னிந்திய யானை வாழ் மாநிலங்கள் கூட்டம் எனப் பெய ரிடப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்ச கத்தின் தலைமை இயக்குனர் ஜிதேந்திர குமார் தலைமை வகித்தார். புலிகள் மற்றும்  யானைகள் திட்டத்திற்கான கூடுதல் வனத் துறை தலைமை இயக்குனர்கள் கோபிசந்த் சாகர் பாரத்வாஜ், தீரஜ் மெட்டல் ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற னர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும்  கேரளா மாநிலங்களைச் சேர்ந்த வனத்துறை  அதிகாரிகள், யானை ஆர்வலர்கள் மற்றும்  நிபுணர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், யானைகளின் வாழ் விடத்தை பாதுகாத்தல், மனித-யானை  மோதல்களை தடுப்பதற்கான புதிய வழிகள்  மற்றும் யானைகளின் நலனை மேம்படுத்து தல் குறித்து விரிவான விவாதங்கள் நடை பெற்றன. யானைப் பாதுகாவலர்கள் மற்றும்  மேலாளர்களுக்கு வளர்ப்பு யானைகளின் நலனை மேம்படுத்துவது குறித்து திறன் மேம் பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி யின் மூலம், யானைகளை சிறப்பாக பராம ரிப்பது மற்றும் அவற்றின் உடல்நலனை  மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு வனத்துறை யில் யானைகள் பாதுகாப்பிற்கு திறன்பட பங் களித்த களப்பணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் களக் கருவிகள் வழங்கி  கௌரவிக்கப்பட்டனர். மனித-யானை மோதல் கள், யானைகள் மற்றும் மனிதர்கள் இருவருக் கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும், இக்கூட்டத்தில் மோதல்களைத் தடுப் பதற்கான பல்வேறு வழிகள் குறித்து விவா திக்கப்பட்டது. இதில், யானைகளின் இடப் பெயர்வு பாதைகளை பாதுகாத்தல், மின் வேலிகள் அமைத்தல் மற்றும் உள்ளூர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்  போன்ற நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை யாகும்.

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்
ஈஷா யோக மைய மருத்துவர் கைது

கோயம்புத்தூர், செப். 7- இலவச மருத்துவ முகாம் என்கிற பெயரில் அரசுப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஈசா யோகா மைய மருத்துவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். சமூக நலத்துறை மற்றும் குழந்தை கள் நலத் துறையினர் பெண் குழந்தை களின் பாதுகாப்புக்கு பல்வேறு விழிப் புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இத்துறையினர், அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளிலும் இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இதுபோன்று, தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தொடுதல் முறை  குறித்தும், பாலியல் சீண்டல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும்,  இதுபோன்ற பாலியல் சீண்டல்கள்  உங்களிடம் யாராவது ஈடுபட்டுள்ளனரா  என கேள்வி எழுப்பியுள்ளனர்.  அப்போது அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள், அண்மையில் ஈசா யோகா மையத்தின் சார்பில் நடமா டும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்ட தும், அதில் பங்கேற்ற ஈசா யோகா மையத்தின் மருத்துவர் சரவணன் மூர்த்தி பாலியல் சீண்டல்களில் ஈடுபட் டதை தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த, குழந்தைகள் நலத் துறையினர் பேரூர்  அனைத்து மகளிர் காவல் துறையினரி டம் புகார் அளித்தனர். இதனையடுத்து, மாணவிகயிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவர் சரவணன் மூர்த்தி  மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு  பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சரவண மூர்த்தி யின் சொந்த ஊர் திருப்பத்தூர். இவர் கோவையில் தங்கி ஈசா யோகா மையத் தில் நடமாடும் மருத்துவக் குழுவில் மருத் துவராக பணியாற்றி வருகிறார்.