districts

img

இயற்கை கொடுத்ததை ஏதோ ஒருவழியில் திரும்ப செலுத்துவோம்

மேட்டுப்பாளையம் முதல் அவிநாசி வரையிலான இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற அப் பகுதியில் உள்ள மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு உள் ளது. வெட்டப்படும் மரங்களுக்கு மாற் றாக பத்து மடங்கு மரங்களை நட இலவ சமாக மரக்கன்றுகளை தந்து பராம ரிக்க ஊராட்சி நிர்வாகம் தயார் செய்து  வருகிறது. சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட் டங்கள் மற்றும் அவிநாசி சுற்றுவட் டார பகுதி மக்கள் கோவை மாவட்டம்,  அன்னூர் வழியாக மேட்டுப்பாளை யம் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு செல்கின்றனர். இவ்வழித்தடம் தற் போது இரு வழிச்சாலையாக உள் ளது. தினசரி இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல் லும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை அதிகபட்சமாக 23  அடி அகலமே உள்ளதாலும் பல இடங் களில் சாலை குறுகலாக செல்வதா லும் அடிக்கடி வாகன நெருக்கடியும், விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இத னால். இச்சாலையை அகலப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந் தது. இதனையடுத்து, மேட்டுப்பாளை யம் முதல் அவிநாசி வரையிலான 35  கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.250 கோடி யில் நான்கு வழிச்சாலை அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை திட்ட மிட்டு பணிகளை துவங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக முதல்வரின் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத் தின் கீழ் ரூ.146 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள் ளது.  இத்திட்டத்தின் கீழ், சாலையில் உள்ள 16 இடங்களில் பாலங்கள் அக லப்படுத்தப்படும், 6 இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்படும். மேலும், இப் பணிக்காக மேட்டுப்பாளையம் முதல்  அவிநாசி வரையிலான 1,432 மரங்கள்  வெட்டப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. வெட்டப்படும் மரங்க ளுக்கு மாற்றாக பத்து மடங்கு புதிய மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படும் என  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து சிக்காரம்பாளையம் ஊராட்சித் தலைவர் ஞானசேகர் கூறு கையில், மேட்டுப்பாளையம் முதல் அவிநாசி வரையிலான சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுவது மகிழ்ச்சி. காலத்திற்கேற்ற மாற்றம்  வளர்ச்சிக்கான திட்டம் இது என்பதில் மாற்று கருத்து இல்லையென்ற போதி லும் இதற்காக ஆயிரத்திற்கும் மேற் பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளது வேதனையான விஷயம். இதற்கு மாற் றாக பத்து மடங்கு மரங்களை நட்டு பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை முன் வந்துள்ளது பாராட்டத்தக்கது. சிக்கா ரம்பாளையம் ஊராட்சி சார்பில் ஓராண்டு இரண்டாண்டு என பராம ரித்து வளர்த்து வரும் மரக்கன்றுகளை வழங்கவும் அவற்றை பராமரிக்கவும் தயாராக உள்ளோம். நாம் இயற்கை யிடம் இருந்து எதை எடுக்கி றோமோ அதை ஏதேனும் ஒரு வகை யில் திருப்பி செலுத்த வேண்டியது  அவசியம். தற்போது சிக்காரம்பாளை யம் ஊராட்சி சார்பில் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ்  ஆண்டுக்கு ஐம்பதாயிரம் மரக்கன்று களை தயார் செய்து பள்ளி மற்றும் கல்லூரிகள், விவசாயிகள் மற்றும் மரம்  வளர்க்க விருப்பப்படும் பொது மக்க ளுக்கு வழங்கி வருகிறோம், என்றார். -சரவணபாபு