திருப்பூர், ஆக.28- புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள 3 குற்ற வியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர் கள் புதனன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடு பட்டு, நீதிமன்றம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். கடந்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளு மன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து விட்டு, எவ்வித விவாதமும் நடத்தாமல் ஒன் றிய மோடி அரசு மூன்று இந்திய தண்டனை சட்டங்களை கொண்டு வந்தது. காவல் துறைக்கு அதிக அதிகாரம் வழங்கும், மக்க ளுக்கு விரோதமான இந்த சட்டத்தை திரும் பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும், எதிர்க் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச் சியாக, தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் புதனன்று தமிழகம் முழு வதும் மனித சங்கிலி போராட்டத்திற்கு அறை கூவல் விடுத்திருந்தது. அதன்ஒருபகுதியாக திருப்பூர் நீதிமன்ற வளாகம் முன்பு நூற்றுக்கணக்கான வழக் கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் பங் கேற்றனர். அப்போது, ஒன்றிய அரசு மூன்று குற்றவியல் திருத்த சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டம் தொட ரும் என முழக்கங்களை எழுப்பினர். இதில் மூத்த வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர் கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் ஏராளமா னோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தால் நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் பாதிக் கப்பட்டன.