திருப்பூர், ஆக. 23 – இந்திய குற்றவியல் மற்றும் சாட்சிய சட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருத மொழிகளில் பெயர் வைத்து, திருத்தம் செய்வதற்கு முயற்சிக்கும் பாரதிய ஜனதா ஒன்றிய அரசின் நடவடிக்கை களைக் கண்டித்து திருப்பூரில் வழக்கறி ஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த திங் கள்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக காலை நேர ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதன்கிழமை நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங் கத் தலைவர் சுமன் தலைமை வகித்தார். இதில் திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர் வழக்கறிஞர் பழனிசாமி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.மோகன், மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.பொன்ராம் உள்பட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு பாண் டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க முடிவுப் படி வரும் 31ஆம் தேதி வரை தொடர்ந்து இப்போராட்டம் நடத்தப்படும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.