கோவை, ஜூன் 27- ஒன்றிய அரசின் புதிய மூன்று சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தி வழக்கறிஞர்கள் 2 நாட்கள் நீதிமன்ற பணி புறக் கணிப்பு போராட்டத்தை வியாழனன்று துவக்கினர். ஒன்றிய அரசின் முன்று புதிய சட்டங்களான பாரதிய நியாய சன் ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகிய சட்டங்கள் நிறைவேற்ற உள்ளது. இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் வழக்காடிகளுக்கும், வழக்குரைஞர்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்திய அரசியல் அமைப்பு பிரிவு 348 க்கு எதிராக நிறைவேற்றப்பட்டதால், மேற்படி சட்டங் களை நிறுத்தி வைத்து மீண்டும் நாடாளு மன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற கோரி யும், மேற்கூறப்பட்ட மூன்று சட்டங்களுக்கும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வியா ழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 2 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்கறி ஞர்கள் பங்கேற்றனர். முன்னதாக, கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஒன்றிய அரசின் இந்த முப்பெரும் சட்டங்களை கண் டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில், கோவை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் திரளா னோர் பங்கேற்று, ஒன்றிய அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். சேலம் இதேபோன்று, சேலம் மாவட்ட குற்ற வியல் வழக்கறிஞர்கள் சங்கத்திலுள்ள நிர் வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும் உறுப்பி னர்கள் அனைவரும் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.