districts

img

லட்சுமண அய்யர் நினைவு தினம்

ஈரோடு, ஜன.2- சுதந்திர போராட்ட தியாகி லட்சுமண ஐயர் நினைவு தினம் கோபிசெட்டிபாளையத்தில் அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி ஜி.எஸ்.இலட்சுமண அய்யர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் லட்சுமண ஐயர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் தாலுகா செய லாளர் (பொ) ஜி.ஏ.துரைசாமி  தலைமை வகித்தார். தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் தாலுகா பொருளாளர்  ஏ.மாரி முத்து உரை ஆற்றினார். விதொச துணை தலைவர் வி.ஆர். மாணிக்கம், போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் எம்.கே. நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.