districts

img

மின் மீட்டர் பற்றாக்குறை: புதிய இணைப்பு பெற முடியாமல் மக்கள் அவதி

உடுமலை, ஜன. 3- மின் மீட்டர் பற்றாக்குறையால், வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெற முடியாமல் மக்கள் அவ தியடைந்துள்ளனர். பல மாதங்களாக காத்தி ருப்பவர்களுக்கு விரைவாக மின் இணைப்புகள் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.  உடுமலை மின்வாரிய தலைமை அலுவ லத்தின் கீழ் உடுமலை டவுன், காந்திநகர், கிராமி யம் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு, பூலாங்கிணறு, வாளவாடி, தளி, மானுப்பட்டி, எலையமுத்தூர், கொமரலிங்கம் மற்றும் குடிமங்க லம் என பல பகுதிகளில் மின்வாரிய கிளை அலு வலகங்கள் செயல்பட்டு வருகிறது.  இந்த அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய வீடு கட்ட மற்றும் பல்வேறு தேவைகளுக்கு புதிய மின் இணைப்புகள் கேட்டு நாள்தோறும் ஏராளமானோர் விண்ணப்பம் அளித்துள்ளனர். மின்வாரிய விதிகளின் படி விண்ணபங்கள் வரும்  நிலையில், பல மாதங்கள் காத்திருந்தும் அதிகமா னோரின் விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு கள் வழங்காமல் உள்ளது. இதுகுறித்து விசாரித்த தில், புதிய மின் மீட்டர் பற்றாக்குறையால் புதிய மின் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து புதிய இணைப்பு கேட்டு விண்ணப் பித்த மக்கள் கூறுகையில், புதிய வீடு கட்ட  தற்காலிக மின் இணைப்புகள் தர விண்ணப்பம் செய்து அதற்கான முழு தொகையை செலுத்தி யுள்ளோம். இரண்டு மாதங்களுக்கு மேல் காலம் கடந்தும் இது வரை மின் இணைப்பு வழங்க வில்லை. மின் வாரிய அலுவலகத்தில் கேட்டால்  அரசிடம் இருந்து எங்களுக்கு மின் மீட்டர் வர வில்லை வந்தால் வரிசைப்படி தான் இணைப்பு வழங்குவோம் என்கிறார்கள். ஆனால், நாங்கள் வீடு கட்டிக்கொண்டிருப்பதால், அவசர தேவைக ளுக்கு அருகில் உள்ள வீடுகளில் இருந்து மின்சா ரம் எடுத்தால் அதிகாரிகள் அபதாரம் செலுத்த  சொல்கிறார்கள். இவர்களும் மின் இணைப்பை தர மாட்டார்கள். கட்டுமானம் பாதிக்ககூடாது என்ப தால் வேறு வழியின்றி அருகில் உள்ளவர்களிடம் மின்சாரம் எடுத்தால் அபராதம் விதிப்பது என்றால் நாங்கள் என்னதான் செய்வது. புதிய இணைப் புக்கு பணம் செலுத்தி பல மாதங்கள் காத்திருக்கும் போது திருட்டு மின்சாரம் எடுத்தோம் என்று சட் டத்தை காட்டி அதிகமான அபராதம் கட்ட சொல் வது எந்த வகையில் நியாயம் என்றனர். மேலும், புதிய மின் இணைப்பு வேண்டி மின்சார வாரி யத்திற்கு கட்ட வேண்டிய முழு தொகையை பெற்று, மின் மீட்டர் இல்லாத காரணத்திற்காக பல மாதங்கள் காத்திருந்தும் இணைப்பு தராமல் மின்  வாரியத்தின் தவறை சரிகட்ட மக்களுக்கு திருட்டு பட்டம் கட்டிவருவது எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றனர்.  பொது மக்கள் பாதிக்காத வகையில் கூடுதல்  மின் மீட்டர்களை அரசிடம் பெற்று புதிய இணைப்பு களை விரைவாக வழங்க வேண்டும் என்பதே பாதிக்கபட்டவர்களின் கோரிக்கையாக உள் ளது.