திருப்பூர், செப்.25- திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் ஸ்ரீ விக்னேஸ்வரா வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஸ்டெம் ரோபோ டிக்ஸ் ஆய்வகம், டிஜிட்டல் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் மாண்டிச்சோரி வகுப்பறை திறப்பு விழா என முப்பெரும் விழா புதனன்று நடைபெற்றது. ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணிதம்) நவீன ஆய்வகம் மாணவர்களின் பயன்பாட்டிற்கும், குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத் திலும் துவங்கப்பட்டுள்ளது. இதில், 35 - 40 டேபிள் டாப்ஸ் சோத னைகள் உபகரணங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. குறிப் பாக சிறிய ரக ரோபோட்கள், ஜி.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி ராக்கெட் மாதிரிகளை வடிவமைப்பதற்கான ப்ளாக் பில்டிங் போன்ற எளிமையான உபகரணங்கள் மாணவர்களை ஈர்க் கின்றன. இந்த ஆய்வகம் மூலம் அறிவியல் கண்டுபிடிப்பு மற் றும் தொழில்நுட்பம் பற்றிய அறிமுகம், பார்த்து தொட்டு உணர்ந்து அனுபவத்துடன் கூடிய கற்றல் மாணவர்களின் எல் லைகளை விரிவுபடுத்தி ஆராய்வதற்கான வாய்ப்பை வழங் குகிறது. பள்ளியில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை கற்பித்தலும், ஒருசேர திறன்சார் கல்வியும் குழந்தைகளை பள்ளியில் தொடர்ந்து படிக்கத் தூண்டுகிறது என்று பள்ளி அறக்கட்டளை நிர்வாகி ராமமூர்த்தி கூறினார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக இ பிக்ஸ் ஸ்மார்ட் கல்வி தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் சரவணன் அருண்குமார் பங்கேற்று ஸ்மார்ட் டிஜிட்டல் வகுப்பறையை திறந்து வைத்தார். உடன் க்ளிக்ஸ் கேப்பிட்டல் நிறு வனத்தின் சுந்தர்ராஜ், சிதம்பரம் மற்றும் வெங்கடேஷ் ஆகியோ ரும் பங்கேற்று சிறப்பித்தனர். திரளான மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.