திருப்பூர், நவ.3- மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகாக்குழு சார்பில் சேகரிக்கப்பட்ட 108 தீக்கதிர் சந்தாவிற்கான தொகை கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.ரகுராமனிடம் ஒப்படைக் கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக தீக்கதிர் சந்தா சேர்ப்பு நடைபெற்று வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகாக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா வழங் கும் நிகழ்வு வியாழனன்று மாலை ஊத்துக்குளியில் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.சரஸ்வதி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.ரகுராமன் பங்கேற்று, 108 தீக்கதிர் சந்தா விற்கான ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 50யை பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். கட்சியின் ஊத்துக்குளி தாலுகாச் செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி சந்தா தொகையை ஒப்படைத் தார். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகாக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர். முடிவில், ச.சசிக்குமார் நன்றி கூறினார்.