districts

img

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் தின விழா

திருப்பூர், டிச.3- திருப்பூர் மாவட்டத்தில் உலக  மாற்றுத்திறனாளிகள்  தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான விளை யாட்டு போட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தின விழா  சனியன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமை யில் உலக  மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற் றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும்  மாற்றுத்திறனாளிகள் தின விழா சனியன்று நடைபெற்றது. முன்னதாக  மாற்றுதிறனாளிகள் தினவிழாவில் பங்கேற்ற  150 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி மாற்றுத்திற னாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை கொடிய சைத்து மாவட்ட ஆட்சியர்  எஸ்.வினீத் துவங்கி வைத் தார். இந்நிகழ்ச்சியில், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், தன்னார்வ அமைப்புகள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.