நூதன முறையில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை
சேலம், ஏப்.13- ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில், நூதன முறையில் மாணவர் சேர்க்கையில் ஆசிரியர் கள் ஈடுபட்டுள்ளனர். 2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை யில், தனியார் பள்ளிகள் நோட்டீஸ் கொடுத்தும், பேனர் வைத்தும் மாணவர்களை அட்மிஷனுக்கு அழைத்து வரு கின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், ஆட்டை யாம்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில், தமிழக பள்ளிக்கல்வி வரலாற்றிலேயே புதிய முயற்சியாக, “மிஸ்டு கால்” கொடுத்தால், வீடு தேடி வந்து உங்கள் வீட்டு திண்ணையில், உங்கள் குழந்தைகளுக்கு அட்மிஷன் கொடுக்கப்படும் என்று பள்ளியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மிஸ்டு கால் கொடுத்தால் கட்சியில் உறுப்பினராக சேர்க்கவும், தனிந பர் கடன், வாகனக் கடன் வாங்கவும், ஜீரோ சதவிகித வீட்டு உபயோக பொருட்கள் வாங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அழைப்பு விடுக்கும். அதேபாணியில் அரசு பள்ளியில் மிஸ்டு கால் கொடுத்தால், வீடு தேடி வந்து அட்மிஷன் கொடுக்கி றோம் என தெரிவித்து, பள்ளியின் தொலைபேசி எண் மற்றும் தலைமை ஆசிரியர் போன் நம்பர் அச்சிட்டு பள்ளி சுவற்றில் பேனர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த பேனரில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்த தால் மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகள் முழுவ தும், அரசு செலவில் படிக்க வாய்ப்பு உள்ளது. தனியார் பள்ளி யில் உள்ளதை போல், இப்பள்ளியில் உள்ள சிறப்பு அம்சங் கள் குறித்த தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக் களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது.
திமுக தேர்தல் பணிமனை திறப்பு
திமுக தேர்தல் பணிமனை திறப்பு நாமக்கல், ஏப்.13- நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், பேளுக்கு றிச்சி ஊராட்சியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்ட அமைப்பு சாரா ஓட்டு நர் அணி தலைவர் நல்லு ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் சரசு திராவிடமணி முன்னிலை வகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர் அசோக்குமார், தேர் தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆனந்தபாபு, ஊராட்சி மன்றத் தலைவர் விஜயகுமார், துணைத்தலைவர் கனகராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் செல்வராசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விதிகளை மீறி மோடி படம் வைத்திருந்தவர் கைது
விதிகளை மீறி மோடி படம் வைத்திருந்தவர் கைது நாமக்கல், ஏப்.13- தேர்தல் விதிகளை மீறி கடையின் முன்பு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் படத்தை வைத்திருந்த அக்கடை யின் உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்த னர். ஏப்.19 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. இதையொட்டி அனைத்துப் பகுதியிலும் தேர்தல் நடைமுறைகள் அதிகாரிகளால் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், குமாரபாளையம், ஆனங் கூர் சாலையில் உள்ள ஒரு பால் கடையின் முன்பு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரது படங்கள் விளம்பர பலகையில் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தேர்தல் விதி முறை மீறியதாக பறக்கும்படையில் இருந்த உதவி வேளாண்மை அலுவலர் பரமசிவம், பால் கடை உரிமை யாளர் சேகர் மீது, குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு, செய்து தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சேகரை கைது செய்தனர்.
பேளுக்குறிச்சி வாரச்சந்தைக்கு விடுமுறை
பேளுக்குறிச்சி வாரச்சந்தைக்கு விடுமுறை நாமக்கல், ஏப்.13- புகழ்பெற்ற பேளுக்குறிச்சி வாரச்சந்தைக்கு விடுமுறை அளித்து ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், பேளுக்கு றிச்சி ஊராட்சியில் புகழ்பெற்ற மளிகைப் பொருட்கள் வாரச் சந்தை மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே ஆகிய 3 மாதங் கள் நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தமிழ கத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் வந்து, ஓராண் டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிச்செல் கின்றனர். அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை 9 மணி வரை, சந்தை நடைபெறுவது வழக்கம். விடிய, விடிய நடைபெறும் சந்தையில், கோடிக்க ணக்கான ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெறும். இந்நி லையில், ஏப்.19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளு மன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பேளுக்குறிச்சி மளி கைப் பொருட்கள் வாரச்சந்தை கூடுவதற்கு தடை விதிக்கப் பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் உமா உத்த ரவு பிறப்பித்துள்ளார். எனவே, அன்றைய தினம் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஊராட்சி நிர்வாகம் அறி விப்பு வெளியிட்டுள்ளது.
டிவிஎஸ் உதிரிப்பாக குடோனில் தீ விபத்து
டிவிஎஸ் உதிரிப்பாக குடோனில் தீ விபத்து சேலம், ஏப்.13- கந்தம்பட்டி பகுதியிலுள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் இருசக் கர வாகன உதிரிப்பாகங்கள் குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கி ரையாகின. சேலம் மாவட்டம், கந்தம்பட்டி ஹவுசிங் போர்டு ரயில்வே தண்டவாளம் அருகே தனியார் நிறுவனமான டிவிஎஸ் உதிரிப்பாக குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோ னில் லாரி மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், ஆயில், டயர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மேலாளர் ஜவகர் என்பவர், வழக் கம்போல பணியை முடித்துவிட்டு வெள்ளியன்று இரவு குடோனை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், நள்ளி ரவு சுமார் 1:30 மணியளவில் குடோனில் இருந்து கரும்புகை கிளம்பி, தீப்பிடிக்க துவங்கியது. இதைக்கண்ட அக்கம் பக் கத்தினர் சூரமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீச்சி அடித்து அணைக்க முற்பட்டனர். இருந்த போதிலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அருகில் இருந்த செவ்வாய்பேட்டை, ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட தீய ணைப்பு நிலையங்களிலிருந்தும் 7 தீயணைப்பு வாகனங் கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 7 மணி நேரம் போராடி தீய ணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சூரமங்கலம் காவல் துறை யினர் மேற்கொண்ட விசாரணையில், மின்கசிவின் காரண மாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும், குடோனில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட் கள் முற்றிலும் தீக்கிரையாகியது தெரியவந்தது. இதுகு றித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறை சார்பில் கொடி அணி வகுப்பு
நாமக்கல், ஏப்.13- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்செங்கோட்டில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட் டில் மாவட்ட காவல் துறை சார்பில், நாடா ளுமன்றத் தேர்தலை ஒட்டி கொடி அணிவ குப்பு பேரணி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலை மையில், துணை காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன் முன்னிலையில் இப்பேரணி நடைபெற்றது. வாலரை கேட் பகுதியில் துவங்கி சிஹெச்பி காலனி, அண்ணா சிலை, நான்கு ரத வீதிகள், சங்ககிரி சாலை வழியாக சென்று அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிறைவுற்றது.
காப்புக்காட்டில் டிரக்கிங் செய்ய வனத்துறையினர் ஆய்வு
காப்புக்காட்டில் டிரக்கிங் செய்ய வனத்துறையினர் ஆய்வு நாமக்கல், ஏப்.13- கொல்லிமலையில் உள்ள காப்புக்கட்டில் டிரக்கிங் செல்ல ஏற்பாடுகள் செய்ய சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதுதொடர்பாக வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத் தலமாக கொல் லிமலை திகழ்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநி லங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பிரசித்திப்பெற்ற ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவி, சினி பால்ஸ், நம் அருவி, தாவரவி யல் பூங்கா, சீக்குப்பாறை காட்சி முனையம், வாசலூர் பட்டி படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு இடங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கொல்லி மலை ஆன்மீக சுற்றுலாத் தலமாகவும் இருந்து வருகிறது. வர லாற்று புகழ்பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில், காசி பெரிய சாமி கோவில், கொல்லிப்பாவை கோவிலும் இங்குள்ளது. மூலிகை வனம் நிறைந்த பகுதியான இங்கு சித்தர்கள் வாழ்ந்த தாக கூறப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், கொல்லிமலையில் டிரக்கிங் செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சோளக்காட்டில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காடு பகுதி அமைந்துள்ளது. சுமார் 500 ஏக்கருக்கு மேலுள்ள வனப்பகுதியில் மூலிகை செடிகள், அரிய வகை தாவரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. அவற்றை பார்வையிடவும், அங்கு சுற்றுலாப் பயணிகள் பொழுதுபோக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அடர்ந்த காப்புக் காட்டு பகுதியில், விரும்பத்தகாத செயல்கள் அதிகளவில் நடைபெற்றதால், சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த வனப்பகுதியில் டிரக்கிங் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்த னர். சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று டிரக்கிங் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வனத்துறை அதிகாரி கள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் அப்பகுதியில் அதிகளவில் அட்டை கள் இருக்கும் என்பதால், அங்கு டிரக்கிங் பாதை அமைக்க முடியுமா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். காப் புக்காடு வனப்பகுதியில் டிரக்கிங் செல்லப்பாதை அமைத் தால் கொல்லிமலைக்கு கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என வனத்துறையினர் எண்ணுகின்ற னர். இதுகுறித்த ஆய்வு நடத்த அப்பகுதியில் உள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
பாஜகவுக்கு அழிவு ஆரம்பமாகிவிட்டது அதிமுக வேட்பாளர் கொதிப்பு
கோவை, ஏப்.13- அண்ணாமலையின் பக்குவம் இல்லா பேச்சால், பாஜக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது என கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசினார். கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது பேசிய அவர், அதிமுகவை அழித்து விடு வேன், டிடிவி தினகரன் பக்கம் அதிமுக வந்துவிடும் என அண்ணாமலை, தோல்வி பயத்தில் என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். இவர்களது கூட்ட ணிக்கு அதிமுக வர வேண்டுமென கடைசி வரை காத்தி ருந்து கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். உங்களுக்கு தான் கூட்டணி தேவை. எங்களுக்கு தேவை இல்லை. 3 ஆண்டுகளாக அண்ணாமலை பாஜக தலைவராக உள்ளார். இந்த காலத்தில் அவர் என்ன சாதித்தார்? நிறைகு டம் எப்போதும் தழும்பாது. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. பாஜகவிற்கு நோட்டா உடன் தான் போட்டி நடக்கி றது. அதிமுக மிகப்பெரிய இயக்கம். இதனை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள். அண்ணாமலை பக்குவம் இல்லாமல் பேசுகிறார். பாஜகவின் அழிவு ஆரம் ்பமாகி விட்டது. 40 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக தேர்தல் அறிக்கையை, ஒரு தொகுதிக்கு மட்டுமே வெளியிட்டுள்ளது. நூறு வாக்குறுதிகளை 500 நாட்களில் நிறைவேற்றுவார்க ளாம். 3500 நாட்களாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு ஏன் செய்யவில்லை? 3 ஆண்டுகளாக தலைவராக உள்ள அண்ணாமலை கோவைக்கு இதுவரை ஒரு துரும்பை கூட கிள்ளி போட்டதில்லை. அண்ணாமலைக்கு தேவை சேவை செய்வது அல்ல. எம்.பி பதவி தான். கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் என பாஜகவினர் கூறுகிறார்கள். அதற்கு முத லில் மோடி அரசு அமைக்க வேண்டும். தகர டப்பா உடன் வந்த அண்ணாமலை, ஹெலிகாப்டரில் தேனிக்கு பிரச்சாரம் செய்ய செல்ல காசு எங்கிருந்து வந்தது? அண்ணாமலை பொய் மேல் பொய் சொல்கிறார். கோவையில் பாஜக பயத்தில் உள்ளது. பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் என யாரை கூப்பிட்டு வந்தாலும் பாஜக வால் வெல்ல முடியாது. பாஜக கீழ்தரமாக பிரிவினைவாத அரசியல் செய்கிறது. அமித்ஷா அதிமுகவை ஊழல் கட்சி என்கிறார். ஆனால் தேர்தல் பத்திரம் நிதியாக 6500 கோடி ரூபாய் வாங்கியுள்ளது. ஊழலைப் பற்றி பேச மோடி, அமித்ஷா, அண்ணாமலைக்கு தகுதியில்லை. சோசியல் மீடியாவில் இருந்தால் மட்டும் ஜெயிக்க முடியாது. களத்தில் இருக்க வேண்டும். பாஜகவையும், அண்ணாமலையையும் நாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அண்ணாம லைக்கு பதில் சொல்வது அதிமுக தலைவர்களின் வேலை அல்ல”எனத் தெரிவித்தார்.
ரோஜா மலர்கள் பூக்க துவங்கியது
ரோஜா மலர்கள் பூக்க துவங்கியது உதகை, ஏப்.13- உதகையில் ரோஜா பூங்காவில் நடப்பாண்டு கோடை விழாவை ஒட்டி, 4,200 வகைகளை சேர்ந்த, 40 ஆயிரம் ரோஜா செடிகள் தயார்படுத்தப்படுகிறது. சீசனுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் கடந்த மாதம் ரோஜா செடிகளுக்கு, ‘புரூனிங்’ செய்யப்பட்டது. பின், உரம் கலந்த தண்ணீர் பாய்ச் சப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் ரோஜா செடிகளை பாதுகாக்க லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சப்பட்டு வருகிறது. தற்போது, மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூக்க துவங்கியுள்ளது. மேலும் பூக்க துவங்கி யுள்ள ரோஜா மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்ப தோடு அதனை புகைப்படம் எடுத்து செல்கின்றனர். ‘இம்மா தம் இறுதிக்குள் பெரும்பாலான வகைகளான ரோஜாக்கள் பூத்து குலுங்கும், ‘என, பூங்கா நிர்வாகம் தெரிவித்தனர்.
வாகனம் மோதி புனுகுப் பூனை உயிரிழப்பு
உதகை, ஏப்.13- இந்திய சிறிய புனுகு பூனை என்ற விலங்கு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவலாக காணப்படுகின் றன. விவசாய நிலங்களையும் அதை ஒட்டிய நிலப்பரப்புகளிலும் அதிக அளவிலாக பரந்து விரிந்து வசித்து வரும் இவ் விலங்கு இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் அமைப்பு மிக வேக மாக அழிவைச் சந்தித்துவரும் ஒரு விலங் காக இதைப் பட்டியலிட்டு உள்ளது. இந்நிலையில் சனியன்று உதகை - கூடலூர் சாலையில் மசினகுடி அருகே இந்த புனுகு பூனை அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் உயிரிழந்து கிடந்தது. அழிவில் விளிம்பில் உள்ள இப்பூனைகள் கடந்த சில நாட்களாக வாக னங்களில் தொடர்ந்து அடிபட்டு இறப்பது வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகம், காலக்காடு முண்டந்துரை புலிகள் காப்பகம், முது மலை புலிகள் சரணாலயத்தில் இந்த இந்திய சிறிய புனுகு பூனைகள் பெரும்பா லும் இரவு நேரங்களில் தனது உணவைத் தேடி நிலப்பரப்பு மற்றும், பாறைகளி லுள்ள எலிகள், பாம்புகள் மற்றும் பூச்சியி னங்களை உணவாகக் தேடி செல்லும். ஒன்பது ஆண்டுகள் வாழும் இவை நான்கு அல்லது ஐந்து குட்டிகளை போடும். இயற்கை சமநிலையில் அனைத்து விலங்குகளும் முக்கியமானதாகும். எனவே இரவு நேரங்களில் வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை ஓட்ட வேண்டும். இவ்வாறு கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு, ஏப்.13- பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பேனர் கள் வைக்கப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு தினத் தன்று அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக தேர்தல் ஆணையம் சார்பில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி, பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வித மாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா, சார் ஆட்சியர் மனிஷ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வெள்ளியன்று தேர்தல் ஆணையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலூன்களை பறக்க விட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.