திருப்பூர், பிப்.20 - காங்கேயம் தாலுகா சிஐடியு ஒருங்கிணைப்புக்குழு அமைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. காங்கேயம் சவுண்டம்மன் திருமண மண்டபத்தில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.காளிராஜ் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ், திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டுமானத் தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.கணேசன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். இதில் திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.திருவேங்க டசாமி, காங்கேயம் கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தாலுகா செயலாளர் ஆர்.பாரதி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்க திருப்பூர் மண்டல மத்திய சங்க நிர்வாகி நடராஜன் உள்பட 25 பேர் கலந்து கொண்டனர். இதில் போக்குவரத்து, மின்சாரம், அங்கன்வாடி, கட்டுமானம், கைத்தறி, உள்ளாட்சி உள்ளிட்ட சிஐடியு சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட காங்கேயம் தாலுகா ஒருங்கிணைப்புக் குழு அமைக் கப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழு கன்வீனராக ர.காளிராஜ் தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தின் நிறைவில் சாந்தி நன்றி கூறினார்.