மாதர் சங்க அமைப்பு தினம் கொடியேற்று விழா
திருப்பூர், டிச. 9 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அமைப்பதி னத்தை முன்னிட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் திங்க ளன்று 11 இடங்களில் மாதர் சங்க கொடி ஏற்றப்பட்டது. இதில், மாவட்டத் தலைவர் பவித்ராதேவி, மாவட்ட துணைத் தலை வர் பானுமதி, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்கே.செல்வி, மாவட்டப் பொருளாளர் கவிதா உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடை கமிட்டி உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவிநாசி ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்வில், ஒன்றியத் தலை வர் சித்ரா, ஒன்றியச் செயலாளர் செல்வி, காளீஸ்வரி, கனகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தெரு நாய்களால் ஆடுகள் பலி: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்பார்ப்பு
திருப்பூர், டிச.9 - திருப்பூர் மாவட்டத்தில் தெரு நாய்களால் விவசாயிகளின் வளர்ப்பு கால்நடைகள் பலியாகி பெரும் இழப்பை சந்திக்கும் விவகாரத்தில், தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தின் அமைச்சரும், காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெள்ளக்கோவில் மு. சாமிநாதன், திருப்பூர் மாவட்டத்தின் விவசாயிகளின் சார்பாக முக்கிய கோரிக்கையாக, தெரு நாய்களுக்கு கால்நடைகளை பலி கொடுத்து, லட்ச லட்சமாக இழந்து, பல குடும்பங்கள் தெருவுக்கு வந்திருக்கின்றனர். எனவே தற்போது கூடும், சட்ட சபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு வழிவகை செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி, நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக விவ சாயிகள் கூறியுள்ளனர்.
திருப்பூர் சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க முதல்வருக்கு எம்பி கோரிக்கை
திருப்பூர், டிச. 9 - திருப்பூரில் கடுமையாக உயர்த்தப்பட் டுள்ள சொத்து வரியை நிறுத்தி வைக்க வேண் டும் என்று தமிழக முதல்வருக்கு திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ப ராயன் கோரியிருக்கிறார். திருப்பூரில் திங்களன்று செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித்த கே.சுப்பராயன் எம்.பி., கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சி சொத்துவரி, குப்பை வரி என அதிர்ச்சி அளிக் கத்தக்க முறையில் வரியை உயர்த்தி இருக் கிறது. அபரிமிதமான சொத்து வரி உயர்வு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது என் பது முழு உண்மை. ஒன்றிய அரசின் பங்கு இதில் அதிகம் உள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரை அடிப் படையில் நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியங்கள் வழங்குவ தற்கு வரியை உயர்த்த வேண்டும் என கட்டா யப்படுத்துகின்றனர். இது கடும் கண்டனத் திற்கு உரியது.
இது கூட்டாட்சி தத்துவத் தையே தவிர்க்கக் கூடிய வேலை. கூட்டாட்சி முறையின் மீது அவநம்பிக்கை ஏற்படுத்தும் சூழ்ச்சி இதில் இருக்கிறது. ஒன்றிய அரசு சொன்னாலும் கூட, மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் மாநில அரசு இந்த வரி உயர்வை முற்றிலும் நிறுத்தி வைக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், வியாபாரிகள் அமைப்புகள், தொழில் நிறு வன பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரை அழைத்துப் பேசி இணக்கமான முறையில் வரி உயர்வு பிரச்சினைகள் தீர்வு காண வேண்டும்.
இதை தமிழக முதல்வர் பரிசீ லிக்க வேண்டும். மேலும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன் முழுமையாக செயல்படுத்த வேண்டும். இது பற்றி ஏற்க னவே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறேன். அடுத்த கூட்டத்தில் பேசுவேன். இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தவும், சம்பந்தப்பட்டவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வேன். திருப்பூரில் வரி உயர்வு பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 18ஆம் தேதி அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை நடத் தும் கடையடைப்பு போராட்டம் நியாயமா னது.
அதை நாங்கள் ஆதரிக்கிறோம். இவ் வாறு கே.சுப்பராயன் கூறினார். இந்த சந்திப்பின்போது இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் எம்.ரவி, மாநகர் மாவட்டச் செயலா ளர் எஸ்.ரவிச்சந்திரன், துணை மேயர் ஆர். பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.
லாரி மீது சொகுசு பேருந்து மோதி 10 பேர் படுகாயம்
அவிநாசி, டிச.9- அவிநாசியில் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகளு டன் சொகுசு பேருந்து திங்கட்கிழமை அதிகாலை கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது அவிநாசி புறவ ழிச்சாலை புதுப்பாளையம் பிரிவு அருகே வரும்போது, கட் டுப்பாட்டை இழந்த சொகுசு பேருந்து முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஷிபு (47). சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பிரகதீஷ் (22). கோவை சூலூர் மாருதி ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (18), கோவை சூலூர் மாருதி ஹவுஸ் நித்யா (40), கோவைப் புதூர் நிஷர்தா அவென்யு நிர்மலா (63), கோவை புதூர் உமா (59) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் அவிநாசி, திருப்பூர், கோவை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.