பள்ளிபாளையம், பிப்.12- உலகம் தோன்ற காரணமாக இருந்ததாக கூறப்படும், ஆதாம் ஏவாள் கற்பனை கதை யில் கூட ஒரு அழகான காதலை நாம் கண்டி ருப்போம். தொடர்ந்து சங்க இலக்கியங்களி லும், புராணங்களிலும், கூட காதல் கதை களும், கவிதைகளும் இருந்து வந்துள்ளது. இப்படி அன்று முதல், இன்று வரை காதல் பல பரிமாணங்களை தாண்டி தொடர்ந்து வரு கிறது. காதலை மையப்படுத்தி காதலை கொண்டாடி வந்த சினிமாக்களோ ஏராளம். தங்கள் வாழ்வில் நடந்த காதல் கதை, நிகழ்வு களை, திரை வழியே சினிமாவில் தன்னுடன் ஒப்பிட்டு பார்த்து கண்கலங்கி சென்றோர் பலர் உண்டு. கடந்த காலங்களில், காதல் என்றாலே பெரும் குற்றமாகவும், மனித சமூகத்திற்கு எதிரானதாகவும், சாதிய மற்றும் மதவாத கும்பல் தொடர்ந்து பரப்புரைகளை மேற் கொள்கின்றனர். அறிவியல் தொழில்நுட்பம், விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்தும், தென் மாவட்டங்களில் இன்னமும் காதல் திரு மணம் செய்யும் தம்பதியினர் ஆணவக்கொலை செய்யப்படுகின்றனர். கொங்கு மண் ண்டலத்தில் கூட தருமபுரி இளவரசன், திருச் செங்கோடு கோகுல்ராஜ் என பலரையும் சமீப காலத்து முன்னுதாரணமாக நம்மால் குறிப் பிட முடியும். இந்தக் கொலைகள் யாவும், சாதி வெறியர்களின் தூண்டுதலாலும் ஊக்கத் தினாலும் இத்தகைய கொலைகள் நடை பெறுகிறது. சில நேரங்களில், பாராட்டி சீராட்டி, தோளில் தூக்கி வளர்த்த தாய், தந்தையர் மற்றும் அண்ணன் தம்பி உள் ளிட்ட குடும்ப உறவினர்களே இந்த ஆணவக் கொலைகளை செய்கின்றனர்.
இந்நிலையில் எத்தனையோ போராட் டங்கள், எத்தனையோ பிரச்சனைகளை சந் தித்தாலும், காலங்கள் மாறினாலும் காதல் அழியாத ஒன்றாகவே உள்ளது. பிப்ரவரி 14 உலக காதலர் தினமாக உலகமெங் கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவா கவே காதலர் தினம் என்றால் அன்பை பரி மாறிக் கொள்ளும் நாள் என குறிப்பிடுவார் கள். மற்றொன்று தங்கள் மனம் பிடித்தவர்க ளுக்கு நினைவு பரிசு பொருளை வழங்குவது காதலர் தினத்தில் நடைபெறக்கூடிய முக்கிய நிகழ்வாகும். தங்கள் மனம் கவர்ந்த பெண் அல்லது ஆணை வசீகரிக்க அவர்களிடம், தங்கள் அன்பை வெளிப்படுத்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் காதலர் தினத்தில் தங் கள் காதலை சொல்ல தத்தளிப்பதும், தவிப் பதும் என போராட்ட நாளாகவே அன்றைய நாள் இருக்கும். அப்படி நினைவு பரிசை வழங்கும் காதலர்கள், வழக்கமான பரிசு பொருட்களை தவிர்த்து, வித்தியாசமான முறையில், அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள பரிசு பொருட்களை அளிக்க விரும்பு கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன் சந்தை பகுதியில், அமைந்துள்ள பரிசு பொருள் அங்காடியில், காதலர் தினத்தை முன்னிட்டு, அதிகளவு பரிசு பொருட்கள் விற் பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகு றித்து கடையின் உரிமையாளர் சரவணன் கூறுகையில், தற்போது பிப்ரவரி 14 காதலர் தினம் இன்னும் ஒரு சில தினங்களில் வர உள்ளதால், அதிகளவு காதலர் தின நினைவு பரிசு பொருட்களை வாங்கி வைத்துள்ளேன். காதலர் தினத்தில் பரிசு பொருட்களை அளிப் பதை அதிகம் பேர் விரும்புகிறார்கள். கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நான் கடை நடத்தி வந்தாலும், இந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் இது போன்ற ஒரு வித்தியாச மான அனுபவத்தை நான் காண்கிறேன். அதே நேரத்தில் தங்கள் அன்புக்குரியவரை கவர வேண்டும் என்ற அடிப்படையில், வித்தியாச மான பரிசு பொருட்களை தேடி தேடி வாங்கு கிறார்கள். எங்கள் கடையில் அதுபோல பரிசு பொருள் இல்லை என்றால், இணையதளத் திலோ அல்லது வேறு ஏதேனும் கடைக ளிலோ பார்த்து இருந்தாலும், அது போலவே எங்களுக்கு வேண்டுமென கேட்டு விரும்பி வாங்கி செல்கிறார்கள். இந்த காதலர் தினத்திலும் அதிகளவு பரிசு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள் ளேன். ஒரு சிலர் பிரத்தியேகமான நினைவு பரிசு பொருளை வழங்க வேண்டும் என ஆர்டர் கொடுத்து இருக்கிறார்கள். அதன் பணிகளை செய்து வருவதாக தெரிவித் தார். சாதி, மதத்தை வேரறுத்து சமத்துவம் பேசும் காதலை, காதலர் தினத்தை அன்புடன் வரவேற்போம்.