உதகை, ஆக.17- நீலகிரி பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, செப்.1 ஆம் தேதி முதல் 400 கிராமத்தில் இருந்து 65 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொள்ளும் உண்ணாவிரத போராட் டம் தொடங்குகிறது என்று சிறு குறு தேயிலை விவசாயிகள் அறிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பள வில் தேயிலை, 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் காபி, 2,400 ஏக்கர் பரப்ப ளவில் மிளகு, 2 ஆயிரம் ஏக்கரில் ஏலக்காய், 17,000 ஏக்கர் பரப்பளவில் மழை காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் தேயிலை விவசாயத்தில் மட்டும் சுமார் 65 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவ சாயிகள் தவிர இதில் ஈடுபடும் கூலித் தொழி லாளர்கள் உட்பட மறைமுகமாகவும், நேரடி யாகவும் சுமார் 4 லட்சம் பேர் இதில் ஈடு பட்டு வருகின்றனர். பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பிரதமர், ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வ ருக்கு தபால் மூலம் மனு அனுப்பும் போராட் டம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. கடந்த ஆக.1 ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரம் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட் டது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் வேண்டு கோளை ஏற்றி போராட்டம் ஒத்தி வைக்கப்பட் டது. ஆனாலும், இதுவரை பசுந்தேயிலை விலை உயர்வு சம்பந்தமாக ஒன்றிய அரசு எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வியாழனன்று சிறு, குறு தேயிலை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் விவசாயிகள் கூறு கையில், நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயி லைக்கு கிலோவுக்கு ரூ.15 வரை மட்டுமே கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. உற் பத்தி செலவை கணக்கிடும்போது இது கட்டுப் படி ஆகாததால் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை கேட்டு பலமுறை மனு கொடுக்கப்பட் டது. தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய தேவையான நடவடிக்கை களை முன்னெடுக்க வேண்டும் என்று நீதி மன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் ஒரு கிலோ தேயிலை உற் பத்திக்கு ரூ.22.50 ஆகிறது என்றும் அதிலி ருந்து 50 சதவிகிதம் கூடுதலாக நிர்ணயம் செய்து ரூ.33.75 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வேளாண் அறிஞர் சுவாமி நாதன் கமிட்டி அறிக்கை அளித்துள்ளது. ஆனால், அந்த அறிக்கையும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுவரை பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாததால், வரும் செப்.1 ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் பொரங்காடு, குந்தா, மேக்குநாடு, தொதநாடு உள்ளிட்ட நான்கு பகுதிகளில் இருந்து 60 ஆயிரத்திற்கும் மேற் பட்ட விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும், என்றனர்.