districts

img

கொங்கல் நகரம் அகழ்வாய்வுப்பணி தொடக்கம்

உடுமலை, ஜூன் 18- உடுமலை பகுதிக்குட் பட்ட கொங்கல் பகுதியில் அகழ்வாய்வுப்பணிகள் துவங் கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 8 இடங்க ளில் அகழ்வாய்வுப் பணி களை காணொளி காட்சி வழியாக தமிழ்நாட்டு முதல் வர் மு.க.ஸ்டாலின் செவ்வா யன்று தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகு தியாக திருப்பூர் மாவட்டம், உடுமலை வட் டம், கொங்கல் நகரம் (எஸ்.அம்மாபட்டி) பகு தியில் அகழ்வாய்வுப்பணிகள் துவக்க விழா விற்கு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் தலைமை வகித்தார். விழாவில் பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகா ரிகள், அரசு அலுவலர்கள், ஊரக உள்ளாட் சிப் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. எஸ்.அம்மாபட்டி பகுதி யில் அகழ்வாய்வுப் பணிகளுக்காக நிலம் வழங்கிய கொடைதாரர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறப்பு விருத்தினர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த னர். கொங்கல் நகரம் பகுதியினை அகழ் வாய்வு செய்வதற்காக காவ்யா கண் காணிப்பாளராகவும், களப்பணி மேற் பார்வை அலுவலராகவும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் மற்றும் களப்பணி மேற் பார்வையாளர் மற்றும் அரசு அதிகாரிக ளுக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடு வத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற நூல்கள் நினைவுப்பரிசுகளாக வழங்கப்பட்டன.