தருமபுரி, பிப்.25- கருணை அடிப்படையிலான பணி வழங்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பொதுக்குழு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுக் குழு கூட்டம் தருமபுரியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்.ரமேஷ் தலைமை ஏற்றார். முன்னாள் மாநில துணைத்தலைவர் எம்.கோபால் துவக்கவுரையாற்றினார். மண்டல செயலாளர் கோ.முனிராஜ் சிறப்புரையாற்றினார். டிஎன்ஜிஏ மாவட்ட செயலாளர் ஏ.சேகர், தமிழ் நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் பெ.பிரபா கரன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.காவேரி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட கணக்கர் மா.கிருஷணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நெடுஞ்சாலைத்துறையில் கருணை அடிப்படையில் பணி வழங்கவேண்டி யவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இளநிலை உதவியாளர், கண்காணிப்பாளர், கோட்ட கணக்கர், பதிவு எழுத்தர் ஆகியோருக்கு உடனடி யாக முதுநிலைப் பட்டியல் வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு கூட்டத்தில், மாவட்ட தலைவராக செ.பாலாஜி, மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ், மாவட்ட பொருளாளராக எச்.ஆர்.சித்தாரத்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க மாநிலபொதுச்செய லாளர் அ.ரெங்கசாமி நிறைவுரை யாற்றினார்.