கோவை மாவட்டத்தில் தொடர் மழை யின் காரணமாக அனைத்து குளங்கள், குட்டைகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகிறது. வறட்சி பகுதி என அறியப்படுகிற அன்னூர், கோவில்பாளையம், சோமனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கோவையில் 709 குளங்கள், கசிவு நீர் குட்டை, தடுப்பணைகள் இருக்கிறது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கட்டுப் பாட்டின் கீழ் இந்த நீர் நிலைகள் உள்ளது. இந்நிலையில், தென் மேற்கு பருவ மழை எதிர்பார்க்காத அளவிற்கு மிக அதிக மாக பெய்துள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. கிராமப்புற பகுதிகளில் வறண்டு கிடந்த நீர் நிலைகளிலும் நீர் நிரம்பியுள்ளது.
மாவட் டத்தில் 550- க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் முழுமையாக நிரம்பி உள்ளதாக ஊரக வளர்ச்சி முகமையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பெரிய நாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள குளங்கள், குட்டைகள் அதிகளவு நிரம்பியிருக்கிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந் துள்ளது. மேலும், வனப்பகுதியில் வன விலங்குகள் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடுகிற நிலையில், வனத்திற்குள்ளேயே தண்ணீர் தேக்க குட்டைகள், தடுப்பணைகள் வனத் துறையினரால் சுமார் 400க்கும் மேற்பட்ட வைகள் ஏற்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் நிரம்பியுள்ளதாக வனத் துறையினர் தெரிவிக்கின்றனர். கோவை மாவட்டத்தில், நொய்யல் ஆற்றின் நீரை ஆதாரமாக கொண்டுள்ள உக்குளம், புதுக்குளம், கொலராம்பதி, நரசாம்பதி உட்பட 24 குளங்கள் முழுவதும் நிரம்பி விட்டது. 21 தடுப்பணைகளும் நிரம்பி உள்ளது. தொடர் மழையால் குளங்களுக்கு தடுப்பணையில் இருந்து நீர் திறக்கப் படுவது நிறுத்தப்பட்டது. குனியமுத்தூர் செங்குளம் நிரம்பி இதன் உபரி நீர் வடிகால் வழியாக குறிச்சி குளத்திற்கு திருப்பி விடப்பட்டது. குறிச்சி குளம் நிரம்பி வடிகால் வழியாக மீண்டும் நொய்யல் ஆற்றில் நீர் பாய்கிறது. கடந்த ஜூன் முதல் இதுவரை நொய்யல் ஆற்றில் 70 நாட் களுக்கு மேலாக நீர் பாய்ந்ததுமழை நீர் வரத்து காரணமாக நொய்யல் ஆற்றில் அவ்வப்போது வெள்ளம் பாய்ந்து கொண் டிருக்கிறது.
பொதுப்பணித்துறை எச்சரிக்கை
அனைத்து குளங்கள், குட்டைகள் நிரம்பியுள்ளதால், ஆர்வ மிகுதியால் இளைஞர்கள் குளிப்பதற்கு செல்கின் றனர். இது ஆபத்தை ஏற்படுத்தும் என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள் ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குளம், தடுப்பணைகளிலும் பொதுமக்கள் குளிக்க கூடாது. சேறு, சகதி மற்றும் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். மேலும், கோவை மாவட்டத்தில் நொய்யல் நீரா தாரம், குருடிமலை ஓடை, பவானி ஆற்றில் மழையால் அதிகளவு வெள்ளம் வந்து கொண்டுள்ளது. மாவட்ட அளவில் உள்ளூர் நீர் தேக்கங்கள், கிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்து விட்டது. நிலத்தடி நீர் மட்டம் மேலும், பல மாதங்கள் உச்சத்தில் இருக்க வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பருவ மழை பெய் துள்ளது. குடிநீர் ஆதார நீர் தேக்கங் களிலும் நீர் மட்டம் உச்சமாக இருக்கிறது. மாவட்ட அளவில் நிலத்தடி நீர் மட்டம் 20 அடி வரை அதிகமாகி உள்ளது என் றனர். நகரின் மையப்பகுதியில் குளங்கள் முழுமையாக தேங்கியிருப்பதால் நிலத் தடி நீர் மட்டம் 100 அடி ஆழத்தை எளிதாக எட்டி விட்டது. கடந்த காலங்களில் குறிப் பாக கோடை காலத்தில் 200 அடிக்கு கீழ் இருந்த நிலத்தடி நீர் மட்டம் 100 அடி வரை வந்து விட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போர்வெல் நீர் தடை யின்றி அதிக நாட்கள் கிடைப்பதாக போர் வெல் அமைத்திருப்போர் தெரிவித் துள்ளனர். வறட்சி பகுதியான அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, கணியூர், நீலம்பூர் பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. மழை நீடிப்பதால், நிலத்தடி நீர் மட்டம் மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழையால் விவசாயிகள் மட்டு மல்லாது, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தி ருப்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.
- அ.ர.பாபு