சேலம், செப்.25- அரசு பள்ளி முன்பு உறுப்பினர் பதிவு செய்து கொண்டிருந்த இந் திய மாணவர் சங்க நிர்வாகிகளை பொதுமக்கள் முன்னிலையில் தர தரவென இழுத்துச்சென்ற சேலம் போலீசாரின் நடவடிக்கை அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரம், அம்மா பேட்டை பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில், இந்திய மாணவர் சங்கத் தின் மாநகரச் செயலாளர் கோகுல் மற்றும் மாவட்ட நிர்வாகி அபிராமி ஆகிய இருவரும் புதனன்று, பள்ளி யின் முன்பு உறுப்பினர் பதிவில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். அப் போது அங்கு வந்த அம்மாபேட்டை போலீசார், கல்வி நிலையம் முன்பு உறுப்பினர் பதிவு போட அனுமதி பெற வேண்டும் எனக்கூறியுள்ள னர். உறுப்பினர் பதிவு போடுவ தற்கு அனுமதி தேவையில்லை. மாணவர்களின் நலனுக்காக போரா டும் அமைப்பு இந்திய மாணவர் சங் கம் எனவும், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த மட்டுமே அனுமதி வாங்க வேண்டும் என மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள் ளனர். போலீசாரிடமே எதிர்த்து பேசு கிறாயா என தங்களுக்கு ஏற்பட்ட கௌரவ பிரச்சனையாக கருதிய அம்மாபேட்டை காவல் நிலைய, காவல் சிறப்பு துணை ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் மாண வர் சங்க நிர்வாகிகளிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். மேலும், பொது மக்கள் முன்னிலையில், காவல் வாகனத்தில் வலுகட்டாயமாக ஏற் றினர். மாணவி என்றும் பாராமல் ஆண் போலீசார் சாலையில் தரதர வென இழுத்துச்சென்று வாகனத் தில் ஏற்றிய சம்பவம் அங்கிருந்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சம்பவம் அறிந்து இந்திய மாணவர் சங்கத்தி னர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் காவல்நிலை யத்திற்கு சென்று மாணவர்களை மீட்டனர். யார் வேண்டுமானாலும் எந்த வொரு சங்கத்திலும் சேரலாம் என் பது உரிமை. அதன்படி, மாணவர் சங்கத்திற்கான உறுப்பினர் பதி விற்கு காவல் துறையின் எந்த வொரு அனுமதியும் தேவை யில்லை. அப்படியிருக்கையில் காவல் துறையினரின் இச்செயல் கண்டத்திற்குரியது. மேலும், பெண் அதிகாரி இல்லால், மாணவியை ஆண் காவலர்களே வலுக்கட்டாய மாக வாகனத்தில் ஏற்றி சென்றுள் ளனர். எனவே, இதில் சம்பந்தபட்ட காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்டக்குழு வலியுறுத்தி யுள்ளது.