districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விரிவடையும் காலை சிற்றுண்டி திட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

சூலூர், மே 12- கோவை மாவட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவ டைய உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரி வித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரக வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வினை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி மேற்கொண்டார். முன்னதாக, தனியார் மண்டபத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட மையப் பொறுப்பாளருக்கான பயிற்சி எவ்வாறு செயல்படுகிறது? என  ஆய்வு மேற்கொண்டார். பின்னர், புதிதாக கட்டப்பட்டு வரும் சந்தைப்பேட்டை வளாகத்தை கட்டுமான பணிகளையும் இதன் அருகே செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி கூறுகையில், இந்த சுத்திகரிப்பு நிலையம்  முன்னோடி திட்டமாக செயல்பட்டு வருகிறது, இதனை  சுத்திகரிப்பு மையமாக மாற்றி சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்து கழிவுநீர் இங்கு  கொண்டுவந்து, சுத்திகரிக்கப்பட்டு குளத்தில் விடுவதற் கான முயற்சி நடைபெற்று வருகிறது. இதனை பாசனத் திற்கு பயன்படுத்துவதற்கான திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி மற் றும் இரண்டு நகராட்சிகளில் பைலட் திட்டமாக தொடங்கப் பட்டது. அது வெற்றிகரமான திட்டமாக செயல்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுடைய வருகை பள்ளிகளில் அதிக ரித்துள்ளது. தற்போது இது அனைத்து ஆரம்ப பள்ளிகளி லும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்கான உணவு களை தயாரிப்பதற்கு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களே அதனை தயாரிப்பதற்கான பணியை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி  வழங்கப்பட்டு வருகிறது. இதில் 13 வகையான உணவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அது சமைப்பதற்கான பயிற்சி வழங் கப்படுகிறது. இதற்கு முன்பாக செயல்படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் சென்ட்ரலைஸ் கிச்சன் மூலம் வழங்கப்பட்டது. தற் போது அது மாற்றப்பட்டு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட உள்ளது. வருகின்ற காலத்தில் 755 ஊராட்சி  பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும், 92 விடுபட்ட நக ராட்சிகளிலும் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது, என்றார்.

ஆயில் வாங்கி ரூ.4 லட்சம் மோசடி: வழக்கு

கோவை, மே 12- கோவை, போத்தனூரில் தனியாருக்கு சொந்தமான ஆட்டோ ஏஜென்சி நிறுவனம்  செயல்பட்டு வருகிறது. இங்கு கோவையை சேர்ந்த ஆயில் கடை உரிமையாளர் அனித் நிர்மல் ராஜ்(43) என்பவர் ரூ. 6.80 லட்சத்துக்கு ஆயில் வாங்கினார். பின்னர் அதற்குன்டான தொகைக்கு 5 காசோலைகளை நிறுவனத்தி னரிடம் கொடுத்தார். அவர்கள் அந்த காசோ லையை வங்கியில் செலுத்தி ரூ. 2 லட்சம் எடுத் தனர். மீதமுள்ள 4 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பியது.  இதைத்தொடர்ந்து நிறுவனத்தினர் அனித் நிர்மல் ராஜிடம் நீங்கள் கொடுத்த காசோலை களில் பணம் இல்லை. எனவே மீதமுள்ள ரூ.4.80 லட்சத்தை கொடுக்குமாறு கேட்டனர். ஆனால், அவர் பல்வேறு காரணங்களை கூறி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந் தார்.  இது தொடர்பாக ஆட்டோ ஏஜென்சி நிறு வனத்தினர் போத்தனூர் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீ சார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் அனித் நிர்மல் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

சேலம், மே 12- சேலம் மாவட்டம், எருமா பாளையம் பகுதியில் ரஞ் சித் - உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் களுக்கு சௌடேஸ்வரன், துவேஸ்வரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கள் குடும்பத்துடன் சேலம், மல்லூர் அருகே உள்ள தனி யார் தீம் பார்க் சென்றுள்ள னர். அப்போது, சௌடேஸ் வரன் தண்ணீரில் விளையா டிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தண்ணீ ரில் மூழ்கி இறந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூங்கா ஊழியர்கள் மீண்டும் போராட்டம்

உதகை, மே 12- நீலகிரி மாவட்ட பூங்கா ஊழியர்களின் உறுதியளித்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றதாதால், மீண்டும் போராட்டத் தில் இறங்கியுள்ளனர்.  நீலகிரி தோட்டக்கலை பூங்கா, பண்ணை களில், நிரந்தரம், தற்காலிகம் என 900 பேர் பணிபுரிகின்றனர். காலமுறை ஊதியம் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி, மார்ச் 23 ஆம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலை யில், சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை யில் ஒரு சில கோரிக்கையை, இரு வாரங்க ளில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். ஏப்.18 ஆம் தேதியில் தற்காலிகமாக போராட் டம் நிறுத்தப்பட்டு ஊழியர்கள் பணிக்கு திரும் பினர். ஆனால், மூன்று வாரங்கள் ஆகியும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், வெள் ளியன்று, மீண்டும் பூங்கா, பண்ணை் ஊழியர் கள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, உதகை கோட்டாட்சியர் துரைசாமி தலைமையில், பூங்கா, பண்ணை பணியாளர்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளு டன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இனி நாட்களில் ரோஜா கண்காட்சி, அடுத்த வாரம் மலர் கண்காட்சி நடக்க உள்ள நிலையில் பூங்கா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளது, பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மே 17ல் யானைகள் கணக்கெடுப்பு பணி

தருமபுரி, மே 12- தருமபுரி வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி மே 17 ஆம் தேதியன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலு வலர் அப்பல்ல நாயுடு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட் டில் உள்ள தருமபுரி உள்ளிட்ட 25 வனக் கோட்டங்களில் இருக்கும் 465 பிரிவுகளில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள் ளது. இந்த கணக்கெடுப்பு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு முறைகளில் நடைபெறும். இதன்படி மே 17 ஆம் தேதியன்று தொடங்கி 3 நாட்கள் கணக்கெடுப்பு பணி  நடைபெறும். மே 17 ஆம் தேதி பிரிவுகள் வாரி யாக யானைகளின் எண்ணிக்கை கணக் கெடுக்கப்படும். மே 18 ஆம் தேதியன்று அதே பிரிவுகளில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடையாளம் காணப்பட்ட வழிகளில் நடந்து சென்று, வழிகளின் இருபுறங்களிலும் யானை களின் சாணத்தை அடையாளம் காணும் மறைமுக கணக்கெடுப்பு நடத்தப்படும். இதைத்தொடர்ந்து மே 19 ஆம் தேதி அந்த பிரிவுகளில் உள்ள நீர் நிலைகளுக்கு வரும் யானைகளின் கூட்டத்தை கண்டறிய நீர்க்குழி  கணக்கெடுப்பு முறை மேற்கொள்ளப்படும்.  இந்த மதிப்பீட்டிற்கு முன் அனைத்து களப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக் கும், வனத்துறையில் பணிபுரியும் நிபுணர் கள், உயிரியலாளர்கள் மூலம் முறையான பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாணவனை கீழே இறக்கி விட்ட பேருந்து நடத்துநர்

கோவை, மே 12- கோவையில் மாணவனை கீழே  தள்ளி இறக்கி விட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர்.  மதுரை உசிலம்பட்டி பாலுசாமி நாடார் தெருவை சேர்ந்தவர் மோகன்  பிரபு (17). 12 ஆம் வகுப்பு படித்துள் ளார். இவர்களது உறவினர்கள் கோவையில் இருப்பதால், மோகன் பிரபுவை கோவை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க அவரது பெற்றோர் விரும்பினர். இதற்காக மோகன் பிரபு கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்காக கோவை வந் தார். பின்னர் சீரநாயக்கன்பாளை யத்தில் உள்ள தனது உறவினர் வீட் டில் செல்வதற்காக அரசு பேருந்து எண் 1 சி-யில் ஏறினார். அப்போது நடத்துநர் மாணவனிடம் பேருந்து சிங்காநல்லூர் செல்லாது, ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும், அங்கிருந்து சிங்காநல்லூர் செல்லு மாறு தெரிவித்துள்ளார்.  அதற்கு மாணவன் அப்படி என் றால், பேருந்து தகவல் பலகையை ஏன் மாற்றாமல் வைத்துள்ளீர்கள், அதில் சிங்காநல்லூர் என்று போடப்பட் டுள்ளதே என கேள்வி எழுப்பினார். இதில் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.  அப்போது, ஓட்டுநர் மற்றும் நடத் துநர் பேருந்தை நிறுத்திவிட்டு மாண வரை காந்திபார்க்கில் கீழே தள்ளி விட்டு இறக்கி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மாணவ னுக்கு லேசான காயம் ஏற்பட்டுள் ளது. இதனையடுத்து மாணவரை அங்கிருந்தவர்கள்  கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ள னர். இதுகுறித்து மாணவன் மோகன் பிரபு ஆர்.எஸ்.புர்ம போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது  ோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அணை நிலவரம் 

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்: 27.27/60 அடி 
நீர்வரத்து: 5 கன அடி
வெளியேற்றம்: 42கன அடி
அமராவதி அணை 
நீர்மட்டம்: 61.26/90 அடி
நீர்வரத்து: 183 கன அடி
வெளியேற்றம்: 7 கன அடி

கடல்சார் பல்கலை., பொது நுழைவுத்தேர்வு 2023-24 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு

சென்னை, மே 12- ஒன்றிய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இவ் வாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளி யிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  பல்கலை கழக துணைவேந்தர் மாலினி வி.சங்கர் கூறுகை யில், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை (2) விசாகப்பட்டினம் போன்ற இடங்க ளில் ஆறு வளாகங்களுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் 17 கடல்சார் பயிற்சி நிறுவனங்கள் இந்திய கடல் சார் பல் கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளன. கப்பலில் பணி புரிய விரும்பும் மாணவர்களுக்கு இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் பி.டெக். (மரைன் இன்ஜினியரிங்), பி.எஸ்சி. (நாட்டிகல் சயின்ஸ்), மற்றும் டிப்ளமோ இன் நாட்டிகல் சயின்ஸ்  (டிஎன்எஸ்) போன்ற இளங்கலை கடல்சார் பாடத்திட்டங்கள் மாலுமி இரண்டாம் அதிகாரி, மூன்றாம் அதிகாரி மற்றும் தலை மைப் பொறியாளர் போன்ற முக்கிய பணிகளுக்கு மாண வர்களை தயார்படுத்துகிறது. பிடெக். (லாஜீஸ்டிக்ஸ், ரீடெய்ல் மற்றும் இ-காமர்ஸ்) போன்ற இளங்கலை கடல்சார் அல்லாத பாடத்திட்டங்கள், கப் பல் கட்டிடக்கலைஞர், கப்பல் வடிவமைப்பாளர், கப்பல்  பாரமரிப்பு பொறியாளர், மற்றும் கடல்சார் தளவாட மேலாளர் போன்ற பணியிடங்களுக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டங் கள் உள்ளன. https://imu.edu.in/imuadmissions/என்ற வலைதளத்தில் மேலும், விவரங்களை தெரிந்து கொள்ள லாம், என்றார். இந்த பேட்டியின்போது, பதிவாளர் கே.சரவணன், பல் கலைக்கழக முதல்வர் மற்றும் சென்னை வளாக இயக்குநர் டாக்டர். ராஜூ பாலாஜி, மற்றும் சென்னை வளாக இயக்குநர் காமேடோர் கே.டி. ஜோஷி (ஓய்வு) தேர்வுக் கட்டுப்பாட்டா ளர் மற்றும் நிதி அதிகாரி (பொ) எம்.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

நிலத்தை அபகரித்த அதிமுக கவுன்சிலரின் கணவரை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்

நாமக்கல், மே 12- நிலத்தை அபகரித்ததை தட்டிக்கேட்டவர் மீது அதிமுக கவுன்சிலர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைர லாகி வருகிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூர்  ஒன்றியம், அலவாய்ப்பட்டி ஊராட்சி, வெள்ளை பிள்ளை யார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் பள்ளி ஆசிரியரான இவருக்கு சொந்தமான வீடு மற்றும் தறிப் பட்டறைகள் உள்ளது. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேல் பூர்வீக இடமாக உள்ளது. இந்நிலையில், அலவாய்ப்பட்டி ஊராட்சியின் அதிமுக 3  ஆவது வார்டு உறுப்பினர் நல்லம்மாள் கணவர் ரவிச்சந்திரன், என்பவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன், கண்ணன் வீட்டின் அருகே நிலம் வாங்கி கண்ணனுக்கு சொந்த மான நிலத்தையும் சேர்த்து, வீடு கட்ட முற்பட்டுள்ளதாக தெரி கிறது. இப்பிரச்சனை சம்பந்தமாக 2018 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல் நிலையத்தில் பேசி நிலத்தை அளவையாளர் வைத்து  அளந்த பின்பே வீடு கட்ட வேண்டும் என முறைப்படுத் தப்பட்டது. இதற்கான தொகையையும் வெண்ணந்தூர் ஒன்றிய அலு வலகத்தில் கண்ணன் கட்டியதற்கான ரசீதை வைத்துள்ளார். அளவையாளர் நிலத்தை வந்து இதுவரை அளந்து தராத நிலையில், அதிமுக கவுன்சிலரின் கணவர், கண்ணனின் நிலத்தை அபகரித்து வீடு கட்ட தொடங்கினார். தன் நிலத்தை  ஆக்கிரமித்து வீடு கட்ட துவங்கிய ரவிச்சந்திரனிடம், “ஏன் இப்படி அராஜகம் செய்கிறாய்?” என தட்டிக்கேட்ட கண் ணனை, அதிமுக கவுன்சிலரின் கணவர் ரவிச்சந்திரனும், அவ ருடைய மகனும் கீழே கிடந்த செங்கலை எடுத்து கண்ணனை  தாக்கியதில் அவருடைய உதடு மற்றும் பற்கள் சிதைந்து, ராசி புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். இதுதொடர்பாக வெண்ணந்தூர் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாதனப் பொருட்கள் திருட்டு

சேலம், மே 12- வாழப்பாடி அருகே மின்சாதனப் பொருட்கள் விற்கும்  கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள  பொருட்கள் திருடிச்சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வாழப்பாடி பேருந்து நிலையம் மேற்கு புறத்தில்  மின்சாதனப் பொருட்கள் கடை வைத்துள்ளார். இந்நிலையில், வியாழனன்று இரவு கடையினை பூட்டி விட்டு சென்ற நிலை யில், வெள்ளியன்று அதிகாலை அருகிலிருந்த கடை உரி மையாளர்கள், செந்தில்குமாரின் கடையின் பூட்டு உடைக் கப்பட்டிருந்ததைக் கண்டு அவருக்கு தகவல் தெரிவித்த னர். இதையடுத்து செந்தில்குமார் அவரது கடையை பார்வை யிட்டபோது, கடையிலிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மின் சார பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து செந்தில்குமார், வாழப்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனம் திருட்டு: வீடியோ வைரல்

பள்ளிபாளையம், மே 12- பள்ளிபாளையம் அருகே இருசக் கர வாகனம் திருடப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  நாமக்கல், பள்ளிபாளையம் அருகே சத்யா நகரை சேர்ந்த ஜவுளி கடை ஊழியர் மதன்ராஜ். இவர் வீட்டின் முன்பு இருசக்கர வாக னத்தை நிறுத்திவிட்டு சென்றுள் ளார். இதன்பின் காலையில் வெளியே வந்து பார்த்த போது இருசக்கர வாக னத்தை காணவில்லை. வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்ட கண் காணிப்பு கேமராவை பார்த்தபோது,  நள்ளிரவில் வந்த இரு இளைஞர் கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. இதன்பின் மதன்ராஜ், பள்ளிபாளையம் காவல்  நிலையத்தில் புகாரின் பேரில், போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

சிறுதானிய விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவை, மே 12- உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் கோவையில் சிறுதானிய விழிப்புணர்வு வாக்கத்தான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். 2023 ஆம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக அரசு அறிவித்ததை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில்  சிறுதானியங்களின்  நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் சிறுதானியங் கள் குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள்,  பெரியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என  ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகை களை ஏந்தி நடைபயணம் மேற்கொண்டனர்.  வ.உ.சி மைதானத்தில் தொடங்கிய இந்த  வாக்கத்தான் பாலசுந்தரம் சாலை வழியாக அவிநாசி சாலையை வந்தடைந்து மீண்டும் வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

தொழில் கடன் பெற அழைப்பு
ஈரோடு, மே 11- ஈரோடு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம் பாட்டு கழகம் மூலம் சாத்திய கூறுள்ள சிறு தொழிகள் மற்றும் வியாபாரம் செய்ய பொதுக்காலக்கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக்கடன், நுண்கடன், ஆண்களுக்கான நுண் கடன் மற்றும் கறவை மாடுக்கடன் ஆகிய கடனுதவி திட்டங் கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி  அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.  குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிக பட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதேபோன்று, பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் கடன், பால் உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்க ளுக்கு கறவை மாடு வாங்க கடன் வழங்கப்படுகிறது. இதனை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெறலாம். விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலகம், கூட்டுறவுச் சங்கங்கின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருட்கள் விற்பனைக்கு உதவி: காவலர், வழக்கறிஞர் கைது

கோவை, மே 12- கோவையில் போலீசில் சிக்கா மல் இருக்க போதைப்பொருள் விற் பனை கும்பலுக்கு திட்டம் போட்டுக் கொடுத்து உதவி புரிந்த  காவலர் மற்றும் வழக்கறிஞர் கைது செய்யப் பட்டுள்ளனர். கோவை மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா மற்றும் போதைப்பொருள் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர, தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு, போதைப் பொருள் கும்பலை கைது செய்து வரு கின்றனர். இந்நிலையில் ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் போதைப் பொருள் தடுப்பு பணியை மேற்கொண் டனர். அப்போது அந்த பகுதியில் சுஜி  மோகன் உட்பட 7 பேர் போதை பொருட் களை இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த கும் பலை தேடி வந்தனர். போலீசார் தேடு வதை அறிந்த அந்த கும்பல் பெங்க ளூருக்கு தப்பி சென்றனர். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி பெங்களூரு சென்று சுஜி  மோகன் உட்பட 7 பேரை சில நாட்க ளுக்கு முன்பு கைது செய்தனர். அப் போது அவர்களிடம் இருந்து 50 கிராம் மெத்தபிட்டமின் என்ற போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய் தனர். பின்னர் அவர்கள் 7 பேரையும் கோவை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக, இவர்களை கைது செய்கையில், இவர்களிடம் இருந்து  பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில்  ஒருவர் போலீசில் சிக்காமல் தப்பிப் பது எப்படி? தப்பு செய்வது எப்படி?  போலீசார் நடமாட்டம் எங்கெல்லாம் உள்ளது? யாரையெல்லாம் போலீ சார் தேடுகின்றனர் என்று தகவல் கூறும் ஆடியோக்கள் இருந்தன. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த ஆடியோவில் பேசியது ஒரு போலீஸ் என்பது அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நக ரைச் சேர்ந்த ஸ்ரீதர் (32) என்பதும், இவர் கோவை மாநகர பந்தயசாலை காவல் நிலையத்தில் காவலராக பணி யாற்றி வருவதும் தெரியவந்தது.  இவருக்கு உடந்தையாக போத்த னூர் அங்காளம்மன் கோயில் வீதி யைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆசிப் (30) என்பவரும் செயல்பட்டுள்ளது தெரியவந்தது. இவர்கள் இரண்டு பேரையும் சரவணம்பட்டி போலீசார் வியாழனன்று நள்ளிரவு கைது செய் தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்த னர்.

பட்டுக்கூடு விற்பனை

தருமபுரி, மே 12- தருமபுரியில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து  பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த அங்காடிக்கு வியாழ னன்று 2,505 கிலோ பட்டுக் கூடு கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.527க்கும், குறைந்தபட்சமாக ரூ.331க்கும், சராசரியாக ரூ.394.26க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.9 லட்சத்து 87 ஆயிரத்து 873க்கு வர்த்தகம் நடை பெற்றது.

மோசடி நபருக்கு அடைக்கலம் தலைமை காவலர் பணிநீக்கம்

திருப்பூர், மே 12- மோசடி நபருக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில், தலைமை காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் தெரிவித்துள்ளார்.  திருப்பூர் மாவட்டம், பல்லடம் சரக காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில்  தலைமை காவலராக ஜெகநாதன் பணிபுரிந்து வந்தார்.  இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மோசடி வழக்கில் போலீ சாரால் தேடப்பட்டு வந்த வாசு குமார் என்ற நபருக்கு தனது  வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக புகார் எழுந்திருந்தது.  மேலும், அதே ஆண்டு அவிநாசிபாளையம் காவல் நிலை யத்திற்கு புகார் அளிக்க வந்த கார்த்திகா பிரியதர்ஷினி என்ற  பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்தும், பெண்மைக்கு களங்கம் விளைவித்ததாக பாதிக்கப்பட்ட பெண் பல்லடம்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனால் தலைமை காவலர் ஜெகநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகள் குறித்தும்  விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பணியில் ஒழுங்கீன மாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,  திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய்,  தலைமை காவலர் ஜெகநாதனை பணி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அவிநாசியில் பருத்தி ஏலம்

அவிநாசி, மே 12- அவிநாசியில், பருத்தி ரூ.15 லட்சத்து 98  ஆயிரத்திற்கு ஏலம் போனது.  அவிநாசி வேளாண்மை உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந் தோறும் பருத்தி ஏல நடைபெறுகிறது.  இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு,  825 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில் ஆர்.சி.எச். பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு  ரூ.6 ஆயிரம் முதல்  ரூ.7719 வரையிலும்,  கொட்டுரக (மட்ட ரக)  பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2ஆயிரம் முதல் ரூ.3500 வரை ஏலம் போனது. வியாழ னன்று பருத்தி ஏல மையத்தில் மொத்தம் ரூ. 15 லட்சத்து 98 ஆயிரத்துக்கு பருத்தி ஏல  வர்த்தகம் நடைபெற்றது.  இந்த ஏலத்தில் அவிநாசி,  புளியம்பட்டி, குன்னத்தூர், ஆத்தூர், மேட்டூர், கோபி, நம்பி யூர், மலையப்பாளையம், சத்தியமங்கலம், கொள்ளேகால், அந்தியூர், அத்தாணி ஆகிய  பகுதிகளிலிருந்து 169 விவசாயிகளும்,  கோவை, ஈரோடு பகுதியிலிருந்து  12 வியா பாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்.

பாண்டியன் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் உடனடியாக திறக்க கோரிக்கை

திருப்பூர், மே 12 – திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் புதி தாக கட்டி பல மாதங்களாகத் திறக்கப் படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலை யத்தை காலதாமதம் இல்லாமல் திறக் கும்படி எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கோரியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்துக்கு அனுப்பியிருக்கும் கடி தத்தில் கூறியிருப்பதாவது:  திருப்பூரில் தான் வசித்து வரும் பாண்டி யன் நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலை யம் புதிதாகக் கட்டப்பட்டு பல மாதங் களாகத் திறக்கப்படாமல் இருக்கிறது. இந்த  பகுதிக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார  நிலையம் பல கிலோமீட்டர் தள்ளி நெருப் பெரிச்சல் பகுதியில் உள்ளது. அதுவும் பிர தான சாலையில் இருந்து இன்னும் சில கிலோ மீட்டர் தள்ளி மினி பேருந்து வசதி கூட  இல்லாமல் உள்ளடங்கிய பகுதியில் அமைந் திருக்கிறது. பாண்டியன் நகர் பகுதி  விளிம்பு  நிலை மக்கள் நிரம்ப உள்ள பகுதியாகும்.  ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல பல  ஆண்டுகளாகச் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, பாண்டியன் நகரில் கட்டப்பட் டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து அது  இயங்குவதற்கு வழி செய்யப் பட்டால், இப்பகுதி  விளிம்பு நிலை மக்க ளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என வலியு  றுத்தியுள்ளார்.