போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்தினை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெழுத்து பெரும் இயக்கத்தை துவங்கியுள்ளது. இதில், பல்வேறு பிரபலங்கள் கையெழுத்திட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக உதகையில், திரைக்கலைஞர் சத்யராஜ் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்தி, நீலகிரி மாவட்ட தலைவர் மணிகண்டன். கோவை மாவட்ட செயலாளர் அர்ஜூன், பொருளாளர் தினேஷ்ராஜா, உள்ளிட்டோர் கையெழுத்து பெற்றனர்.