districts

பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசுகள்

நாமக்கல், ஆக.29- ராசிபுரம் அருகே நாட்டு வெடி தயாரித்து  கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில், பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே  உள்ள வி.நகர் பகுதியில், கண்ணன் என்ப வருக்கு சொந்தமான பட்டாசு குடோன் செயல் பட்டு வந்தது. இந்நிலையில், திங்களன்று இரவு 7 மணியளவில் திடீரென பட்டாசு குடோ னில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி, பட்டாசுகள் தொடர்ந்து பயங்கர சத்தது டன் வெடிக்க தொடங்கியது. இதனால், குடி யிருப்பில் இருந்த அனைத்து மக்களும் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 ஆவது மாடியில் சிக்கி தவித்த கண்ணன் குடும்பத்தினரை ஏணி வைத்து, கயிறு கட்டி பத்திரமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதில் கண்ணன் படுகாயமடைந்த நிலையில் அவரின் மனைவி, இரண்டு மகன்கள், அவரின் அண்ணன் மனைவி மற்றும் அவரது மகள் லேசான காயத்துடன் ராசி புரம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், குடியிருப்பில் கண்ணன்  சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்த தும், குடும்பத்துடன் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தபோது, கொசுவர்த்தியை பயன்படுத்தியால் வெடி விபத்து ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்ட வீட்டை ஆட்சியர் ச.உமா, ஆய்வு மேற்கொண்டார்.  இவ்விபத்தின், முதற்கட்ட விசாரணை யில் உரிமம் இல்லாமல் வெடி தயாரித் தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந் தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என ஆட்சியர் ச.உமா தெரிவித் தார். மேலும், மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர் களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.