திருப்பூர், மே 15- மக்களின் அடிப்படைத் தேவை களை நிறைவேற்ற கோரி, திருப்பூர் வடக்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அங்கேரிபாளையம், அத்துபாளையம் செட்டிபாளையம், குமரன் காலனி, இந்திரநகர் ஆகிய 5 மையங்களில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயி றன்று தர்ணா போராட்டம் நடைபெற் றது. திருப்பூர் வடக்கு ஒன்றியம் பகுதி யில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக மாற்ற வேண்டும். மாநகராட்சி மற்றும் ஒன்றிய முழுவதும் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடி யாக சரி செய்ய வேண்டும். அனைத்து பகுதி மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை சீராக வழங்க வேண்டும். கோவையிலி ருந்து ஈரோடு வழியாக சேலம் செல்லும் பாசஞ்சர் ரயில்களை கூலிப்பாளையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற் பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டம், அங் கேரிபாளையம் எஸ்.ராஜேஷ், அத்துபா ளையம் ஜெ.சங்கர், செட்டிபாளையம் பி.சுப்பிரமணி, குமரன் காலனி கே. ராஜாமணி, இந்திரநகர் கே.மகேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற் றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ரங்கராஜ், சா. நந்தகோபால், வடக்கு மாநகர செயலாளர் பிஆர். கணேசன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, முன் னாள் கவுன்சிலர் கே.மாரப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி.மகா லிங்கம், ஏ.சந்தோஷ் குமார், கே. வசந்தி, என்.கோபால், என்.இளங்கோ, வாலிபர் சங்க வடக்கு ஒன்றிய தலைவர் ஜி.ரேவந்த், மாதர் சங்க நிர்வாகிகள் ஏ. கீதாலட்சுமி, ஜி.மீனாட்சி, எம்.ஜெயக் கொடி மற்றும் ஆர்.என். ரத்தினசாமி, எஸ்.பாண்டுரங்கன் எம்.பத்மநாபன், கிளைச் செயலாளர் இ.வெங்கடாசலம் பி.நரேந்திர பிரசாத் என்.மனோகர் ஆகியோர் பங்கேற்றனர்.