அவிநாசி, செப்.12- மக்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள காலதாமம் செய்வதைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி நகர்மன்றக் கூட்டத்திலிருந்து, சிபிஎம் கவுன்சிலர் வெளிநடப்பு செய் தார். திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகர்மன்றக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் குமார் தலைமையில் வியாழ னன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 14 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தேவராஜன் பேசுகையில், உமையஞ்செட்டி பாளையம், மண்ணுக்குட்டை, அனுகிரஹா பகுதியில் தார்ச்சாலை அமைத்தல், சாக்கடை அமைத்தல், பள்ளி சுற்றுச் சுவர் பணி, குளம், குட்டை தூர்வாரும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் பணிகள் மேற்கொள்ளாமல் உள்ளன. இதனைக் கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறேன். மேலும், பணிகள் தாமதமாகும் பட்சத்தில் மக்களவை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக, அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த சுப்பிரமணியம் பேசுகையில், பல்வேறு தேவை களுக்காக வாடகை இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலமாக ரூ.5 லட்சம் செலவினங்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே, நகராட்சிக்கு சொந்தமாக ஜேசிபி வாங்குவதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கான்கிரீட் சாலை அமைப்பதற்காக ஒரு சில நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பார பட்சமாக நிதி ஒதுக்கீடு செய்வதை கைவிட்டு, அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திருமுருகன்பூண்டி கிராம நிர்வாக அலுவலகம் முதல் பெரியாயிபாளையம் சாலை குறுகலாக உள்ளது. இத னால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். எனவே, சாலையை உடனடியாக விரிவாக்கம் செய்ய வேண்டும், என்றார்.