districts

img

தோழர் ஆர்.பாலகிருஷ்ணனின் 20 ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

கோவை, அக்.27- கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர் தோழர் ஆர்.பாலகிருஷ்ணனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட உழைப்பாளி மக்களின் மதிப்பு மிக்க தலைவரும், மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் ஸ்தாபக தலைவருமான தோழர் ஆர்.பாலகிருஷ்ணனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, காந்திபுரம் அடையார் ஆனந்த பவன் ஆர்.வி.ஆட்டோ ஸ்டாண்டில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்டோ சங்க கிழக்குப் பகுதி கமிட்டிச் செயலாளர் எ.மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் மனோகரன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் இரா.செல்வம், மாவட்ட பொதுச்செயலாளர் எம்.கே.முத்துகுமார், மாவட்டப் பொருளாளர் எம்.மைக்கேல் சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் திரளாக பங்கேற்றனர். இதேபோன்று, கோவை வடக்கு, கணபதிபுதூர் பகுதியில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்திற்கு வடக்கு நகரக்குழு உறுப்பினர் எஸ்.நாராயணசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர். சி பத்மநாபன். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர். என்.ஆர்.முருகேசன். வடக்கு நகரச் செயலாளர். ஆர். சுந்தரம், கட்சியின் மாமன்றக்குழு தலைவர் வி.இராமமூர்த்தி மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.