districts

img

புதிய வரைவு மசோதா: ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் கண்டனம்

ஈரோடு, பிப்.9- பல்கலைக்கழக மானியக்குழு புதிய வரைவு மசோதாவிற்கு தமிழ் நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்துள் ளது. தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி  ஆசிரியர் கழகத்தின் பொன்விழா ஆண்டையொட்டி ஈரோட்டில் சனி யன்று சிறப்பு பேரவை நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு, கிளைச் செய லாளர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். தமிழகத்தில் 36 கிளை களுடன் செயல்பட்டு வரும் இச் சங்கத்தின் மாநில துணைத் தலைவ ரும், பெரியார் பல்கலைக்கழகத் தின் மேனாள் ஆட்சிக்குழு உறுப்பி னருமான பெ.மாது சிறப்புரையாற் றினார்.  இந்நிகழ்ச்சியில், ‘பல்கலைக் கழக மானியக்குழுவின் புதிய  வரைவு மசோதாவும், அதன் எதிர் வினைகளும்’ என்ற தலைப்பில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், கல்வி ஒத்திசைவுப் பட்டி யலில் இருக்கிறது. ஆனால் இவர் கள் பலவந்தமாக திணிக்கப்பார்க் கின்றனர். மாநிலத்தின் அதிகாரத் தில் இருக்கக்கூடிய பல்கலைக் கழகங்களுக்கு சம்பளம் உள்பட நிதி அனைத்தும் மாநில அரசுகளே வழங்குகிறது. பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு இணைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வேந்தராக ஆளுநரை வைத்திருக் கிறார்கள். ஆனால் மாநிலத்தின் அதிகாரங்களை பிடுங்கி அங்கே கொண்டுபோய் கொடுப்பதற்கான நிகழ்வுகள் நடக்கின்றன. கல்வியா ளர்கள் மட்டுமில்லாமல் தொழில்  முனைவோரும் உள்ளே வரலாம் என்கின்றனர். மானியக்குழுவிலி ருந்து ஒருவரை வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.  கல்வியை நெறிப்படுத்திக் கொண்டு செல்ல கல்வியாளரால் மட்டுமே முடியும். குளறுபடிகள் இருந்தால் அதைச் சரி செய்யலாம்.  ஆனால் அது அதிகரிக்கும் வகையி லான நடவடிக்கைகள், அதிகா ரத்தை பறிக்கும் வகையிலும் உள் ளது. இதை கல்வித்துறை சார்ந்த பிரச்சனையாக மட்டுமின்றி சமுதா யப் பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும்.  மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கல்வியில் எவ்வளவே தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது. புதிய வரைவு மசோதா அமலா னால் பள்ளிக்கும், இளநிலை பட்டப் படிப்பிற்கும் சம்பந்தமிருக்காது. இளநிலைக்கும் முதுநிலை பட்டப் படிப்பிற்கும் சம்பந்தம் கிடையாது. முதுநிலை கல்விக்கும் ஆராய்ச்சிக் கும் சம்மந்தம் இருக்காது. தனித் தனியாக படியுங்கள் என்கின்றனர்.  நமது கல்வி முறை கட்டுக் கோப் பான கல்வி முறையாக இருக்கிறது. உதவித்தொகைகளுக்கு வாய்ப்பி ருக்கிறது. சாதாரணமாக கலை அறி வியல் கல்லூரியில் 80 விழுக்காட்டி னர் உதவித் தொகையில்லை எனில் படிக்க மாட்டார்கள். இதனால் கற்று  மேலே வர முடிகிறது. மாறாக எதை  வேண்டுமானாலும், எப்படியாவது படி என்னும் போது ஆசிரியர்கள்  நியமனம் மிகக் கடுமையாகப் பாதிக் கும். 1, 2 மணி நேரம் தான் வகுப்பு என்றால் ஆசிரியர்கள் நியமிக்க  மாட்டார்கள். வெளிமுகமைக்கு கொடுத்து விடுவார்கள். இது போன்ற சிக்கல்களை நிறைய வரு கிறது, எதிர்நோக்கியிருக்கிறோம்.  ஆகவே, இதனை வெறும் கல்வி சார்ந்த விசயமாகப் பார்க்கா மல், சமூகத்திற்கு மிகப் பெரிய பின் னடைவை ஏற்படுத்தும். சமூ கத்தை பின்னோக்கி தள்ளும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் கடுமையாக அஞ் சுகிறது. பிப்ரவரி இறுதி வரை கெடு விதித்துள்ளனர். எனவே எல்லோ ரும் முடிந்தவரை எதிர்வினை யாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.