ஈரோடு, ஏப்.4- மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில், அதனை செலுத்துமாறு நிர்பந்திக்கும் குழு தலைவர் மற்றும் வங்கி அலுவலர் மீது நடவ டிக்கை கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பெண் கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத் திற்குபட்டது காரணம்பாளையம். இங்குள்ள 9 பேர் இணைந்து முல்லை மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி நடத்தி வருகின்றனர். இக்குழுவினர் மாதம் தலா ரூ.210 வீதம் சேமித்து குட்டப்பாளையத்திலுள்ள ஏஏ529 கொளாநல்லி குட்டப்பாளையம் கூட்டுறவு வங்கியில் சேமித்து வருகின்றனர். அத்துடன் ரூ.4.50 லட்சம் கடன் பெற்று தவணை செலுத்தி வந்தனர். கொரோனா காலத்தில் தவணை தொகை செலுத்த முடிய வில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசு இக்கடனை தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் குழு தலைவி சே.கனகவள்ளி, துணை தலைவி வசந்தா ஆகியோர் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். இதுகுறித்து வங்கி செய லாளர் சேதுபதியிடம் கேட்ட போது, இதை வெளியே சொல்ல வேண்டாம். கடனை அனைவரும் பிரித்து செலுத்துங்கள். கட்ட வில்லை என்றால் கடந்த 9 ஆண்டுகளாக சேமித்து வந்த பணத்தை தரமாட்டேன் என் கிறார். எனவே, இந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.