தோழர் கண்ணாடி ராஜ் காலாமானார் சேலம், பிப்.18- சிஐடியு தோட்டத் தொழிலாளர் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் கண்ணாடி ராஜ் செவ்வாயன்று காலமானார். சேலம் மாவட்ட தோட்டத் தொழிலா ளர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டச் செய லாளர், சிஐடியு மாவட்டக்குழு உறுப் பினராக ஏற்காடு கண்ணாடி ராஜ் பணி யாற்றி வந்தார். இந்நிலையில், சாலை விபத்தில் சிக்கி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பல னின்றி செவ்வாயன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு சிஐ டியு சேலம் மாவட்டக்குழு சார்பில் இரங்கல் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்காடு, கொட்டசேடு பகுதியில் நடைபெற்ற தோழரது இறுதி நிகழ்வில், சிஐடியு மாவட்டத் தலைவர் டி. உதயகுமார், செயலாளர் ஏ.கோவிந்தன், பொருளாளர் வீ. இளங்கோ, உதவித்தலைவர்கள் எஸ்.கே.தியாகராஜன், பி. பன்னீர்செல்வம், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.குணசேகரன், சிபிஎம் ஏற்காடு தாலுகா செய லாளர் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.