திருப்பூர், மே 9– திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், மேற் பார்வையாளர்களுக்கு, மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகம் செய்யும் ஊழியர்கள் லஞ்சம் கேட்டு மிரட்டு வதை தடுத்து நிறுத்துமாறு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் நேரில் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழி யர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, மாவட்டத் தலைவர் எம். ஆறுமுகம், துனணத்தலைவர் பி. திருமூர்த்தி, துணைச் செயலாளர் கள் என்.கனகராஜ், டி.செந்தில், ஜீ. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செவ் வாயன்று டாஸ்மாக் மாவட்ட மேலா ளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுமார் 250 மதுபானக் கடை களில் விலை குறைவான, அதேசம யம் அதிகளவு விற்கப்படும் பீர் பாட்டில் கள் கடைகளுக்குக் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்த நிலையை பயன்படுத்தி கிடங் குகளில் இருந்து கடைகளுக்கு அனுப் புகின்ற பீர் உள்ளிட்ட சரக்குகளுக்கு கிடங்கு மேலாளர்கள் அல்லது பொறுப் பாளர்கள் குறிப்பிட்டத் தொகை யைக் கொடுத்தால் மட்டுமே கடைக ளுக்கு சரக்குகளை இறக்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இல்லாவிட் டால் கடைகளுக்கு சரக்கு அனுப்புவ தில்லை. நாட்கணக்கில் தாமதமாக அனுப்புகின்றனர்.
அத்துடன் கடைக ளுக்கு வழக்கமான நேரத்துக்கு முன்பே சரக்குகளை அனுப்பி வைப் பதற்கு ரூ.1000 லஞ்சம் கேட்கப்படுவ தையும் நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும். மாவட்ட மேலாளருடன் மதுபா னக் கடைகளுக்கு ஆய்வுக்கு வரும் ஊழியர்கள் மேலாளர் பெயரை பயன் படுத்தியும், மறைமுகமாகவும் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டிப் பணம் பெறுவது தொடர்கி றது. பணம் தர மறுக்கும் கடைக்காரர் கள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி மிரட்டி பணம் பெறும் அவல நிலையும் உள்ளது. இதை போக்க வேண்டும். ஆய்வுப்பணிக்கு ஊழி யர்களை உட்படுத்த வேண்டாம். கடைகளில் மதுபான சரக்கு பெட்டி களை இறக்கி ஏற்றுவதற்கு அரசு நிர்ணயித்திருக்கும் கூலிக்கு மாறாக போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள் கட் டாயப்படுத்தி கூடுதல் தொகை கேட் கின்றனர். பர்மிட் போடவும், இன்டே னுக்கும் பணம் கேட்கும் நிர்வாக சீர் கேடு உள்ளதை களைய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் மரணம் அடைந்து விட்டால் அவர்களுக்கு நிர் வாகத் தரப்பில் கிடைக்க வேண்டிய பணப்பயன்களைப் பெற சம்பந்தப் பட்ட குடும்பத்தாரிடம் தேவையான ஆவணங்களைப் பெற்று விரைவாக பணப்பலன் கிடைக்க உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேணடும். ஆனால் இப்பிரிவு அலுவலக ஊழி யர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரி டம் ரூ.10ஆயிரம் லஞ்சம் கேட்கப்படு கிறது. இந்த சீர்கேட்டை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.