ஈரோடு, மே 25- தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்போம், ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை களை கண்டித்து சிஐடியு நடைபயணம் மேற்கொண்டுள்ளது. 6 ஆவது நாள் நடைபயணமாக ஈரோடு, சேலம் மாவட் டத்திற்கு வந்த நடைபயண குழுவிற்கு எழுச்சிகரமான வரவேற்பு அளிக்கப் பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ 26 ஆயிரம் வழங்க வேண்டும். திருத்தப் பட்ட தொழிலாளர் சட்ட தொகுப்பு களை கைவிட வேண்டும். தொழிலாளர் கள் நலன் காக்கும் வகையில் முத்தரப்பு குழுக்களை செயல்படுத்திட வேண் டும். பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. அரசு, பொது துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 7 முனைகளிலிருந்து பிரச்சார நடைப யணம் திருச்சியில் சங்கமிக்க உள்ளது. கோவையில் 19ஆம் தேதி சிஐடியு மாநில செயலாளர் கே.சி.கோபிகுமார் தலைமையில் புறப்பட்ட நடைபயணக் குழு புதனன்று இரவு ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடைந்தது. வியாழ னன்று காலை பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் 6 ஆவது நாள் பயணம் தொடங்கியது. சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். பெருந்துறை பொது தொழிலாளர் சங்க தலைவர் ஜி.பழனி சாமி வரவேற்றார். பயணக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். புதிய பேருந்து நிலையத்தில் முத்துபழனிசாமி வரவேற் றார். மக்களை தேடி மருத்துவ ஊழியர் கள் பயண குழுவினருக்கு மாலை அணி வித்து வரவேற்று பழரசங்கள் வழங்கி னர். டாஸ்மாக் ஊழியர்கள் மாம்பழங் கள் வழங்கினர். முன்னதாக பயிற்சி
மருத்துவர் ஒருவர் பயண குழுவின ருக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித் தார். பெத்தாம்பாளையம் பிரிவில் அண்ணா சுமை தூக்கும் தொழிலா ளர் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் கேப்புசாமி ஆகியோர் தலைமையில் வரவேற்பளித்தனர். தொடர்ந்து அண்ணா சிலை வழியாக பவானி லட்சுமி நகர் நடைபயணம் சென் றது. லட்சுமி நகரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் பி.பி. பழனிசாமி வரவேற்றார். அந்தியூர் பிரி வில் பவானி பொது தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.ஜெகநாதன் வரவேற் றார். புதிய பேருந்து நிலையத்தில் மாணிக் கம் வரவேற்றார். ஒவ்வொரு மையத்தி லும் கதர் துண்டுகள் அணிவித்து, மோர், பழரசம், குளிர்பானங்கள் அளிக்கப் பட்டது. மாலையில் ஈரோடு புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவ மனை, பன்னீர்செல்வம் பூங்கா, காளை மாட்டுச்சிலை, எஸ்கேசி ரோடு, சுரம்பட்டி பஸ் நிறுத்தம் ஆகிய மையங்களில் நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு நடைபயண குழுவிற்கு ஈரோடு மாவட்டத்தில் எழுச்சிகரமான வர வேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வு களில், சிஐடியு ஈரோடு மாவட்ட செயலா ளர் ஸ்ரீராம், உதவி தலைவர்கள் ஆர். ரகுராமன், என்.முருகையா, உதவி செய லாளர்கள் பி. ஸ்ரீதேவி, வி.பாண்டியன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை வழியாக பவானி சென் றது. நடைபயண குழு ஈரோடு வழியாக கரூர் மாவட்டம் சென்றது.
சேலம் மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு
ஓசூர் முனையிலிருந்து கிருஷ் ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் மே 19 முதல் 24வரை எழுச்சி மிகு நடை பயண பிரச்சாரம் மேற்கொண்டு மே 25 காலை சேலம் மாவட்டத்தில் நடைபயண பிரச் சாரம் துவங்கியது. சேலம் மாவட்டத்தில் நடைபயணக் குழுவிற்கு, மே 25 காலை 7 மணிக்கு தீவட்டிபட்டியில் ஆட்டோ தொழிலா ளர்கள் சங்கம் சார்பாக சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது. பயணக்குழு தலைவர் ஆறுமுக நயினார் செங்கொடியினை ஏற்றி, சிறப் புரையாற்றினார். சேலம் மாவட்டம் ஓம லூர் தாலுகா பூசாரி பட்டி, திண்ணப் பட்டியில் பிரச்சாரம் மேற்கொள் ளப்பட்டது. தாராபுரம் மையத்தில் அங்கன் வாடி ஊழியர்கள் சங்கம் சார்பாகவும், செம்மாண்டம்பட்டி மையத்தில், கைத் தறி, விசைத்தறி , நாச்சி கிரானைட் சங்கங் கள் மற்றும் ஓமலூர் தாலுகா சிபிஎம், சேலம் மாவட்ட விவசாயிகள் சங்கம், சார்பாகவும் நடைபயணக் குழுவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தீவட்டி பட்டியில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாகவும் வரவேற்பு அளிக்கப் பட்டது சேலம் வி.பி. சிந்தன் கலைக்கு ழுவினர், பிரச்சார மையங்களில் இயக் கப் பாடல்களை பாடினார்கள். ஓமலூர் செம்மாண்டப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணக்குழு தலைவருக்கு தவிச சார்பில் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, சிபிஎம் சார்பில் வட்ட செயலாளர் என். ஈஸ்வரன், தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பி. அரியாக்கவுண்டர் ஆகியோர் கதராடை அணிவித்து, வரவேற்றனர். மேட்டூரில் இருந்து வி.இளங்கோ தலைமையில் வந்த உப குழுவிற்கு மேச் சேரி மற்றும் எறகுண்டப்பட்டி பகுதி களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சுட்டெரிக்கும் வெயிலில் உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கைத் தறி சிஐடியூ சார்பில் பயணத்தில் வந்தோ ருக்கு கதராடை அணிவித்து கௌரவிக் கப்பட்டனர். துணைத் தலைவர் பி.தங்கவேலு, ஒன்றிய தலைவர் கே.மாது, ஒன்றிய செயலாளர் பி.பழனிசாமி, பொரு ளாளர் முத்துசாமி, சிபிஎம் ஒன்றிய செய லாளர் ஜி.மணிமுத்து, எம்.ரத்தினவேல், மேச்சேரி பேரூராட்சி கவுன்சிலர் ஆர்.ப ழனி, கைத்தறி சிஐடியூ மாவட்ட தலை வர் ஏ.அன்பழகன், உள்ளிட்டு நூற்றுக் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சேலம் மாவட்டம் நஙகவள்ளியில் அங்கன் வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங் கம் சார்பாக, கட்டுமான தொழிலா ளர்கள் சங்கம் ( பெண்கள் கிளை) சார்பா கவும் பெரும் திரளான வரவேற்பு அளிக் கப்பட்டது. சேலம் உருக்கு ஆலை முன்பாக வந்த நடைபயண குழுவினரை சேலம் சிஐடியு உருக்கு ஆலை தொழிற்சங் கத்தினர் சங்க பொதுச் செயலாளர் சுரேஷ் குமார் தலைமையில் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமார் மங்கலம் மருத்து வக் கல்லூரி வழியாக புது ரோடு வந்த டைந்தனர். புது ரோட்டில் எழுச்சி கரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பி. பாலகிருஷ்ணன், பி. சந்திரன் உள்ளிட்டு திரளானோர் பங்கேற்றனர். நடைபெற்ற நடைபயண குழுவில் சிஐ டியு மாவட்ட செயலாளர் ஏ. கோவிந் தன், சேலம் மாவட்ட பொருளாளர் இ ளங்கோ, சாலைப்போக்குவரத்து மாநில துணைத்தலைவர் எஸ்.கே. தியாக ராஜன், மாநில துணைத்தலைவர் ஆர். சிங்காரவேல், மாநில குழு உறுப்பி னர் ஆர்.வெங்கடபதி பி.பன்னீர்செல் வம் உள்ளிட்ட நடைபயண குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.