சேலம், டிச.1- ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை உடனடியாக துவங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மின்வாரிய ஊழியர்கள் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு குறித்த ஒப்பந்தம் போடப்படும். இந்நிலை யில் கடந்த 2019 முதல் 2022 வரை மூன்று ஆண்டுகள் ஆன நிலை யில், இதுவரை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்படா ததைக் கண்டித்தும், உடனடியாக ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டும். மின்சார வாரி யத்தில் உள்ள காலிப்பணியிடங் களை நிரப்பிட வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு மின் வாரிய ஊழியர்கள் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் உடையாபட்டி பகுதி யில் உள்ள தமிழ்நாடு மின் உற் பத்தி மற்றும் பகிர்மான கழக மேற் பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மின்வாரிய கிளை தலைவர் கருப்பண்ணன் தலைமை வகித்தார். இதில், செய லாளர் ரகுபதி உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செய லாளர் வி.இளங்கோ உள்ளிட்ட திரளான மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கோவை
இதேபோன்று, கோவை மாவட்டத்தில், கணபதி, குனிய முத்தூர், சோமனூர் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. இதில், திரளான மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.