districts

img

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக

கோவை, ஆக.20- மின்வாரிய ஒப்பந்தத் தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய  வேண்டும் என வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் குடும்பத்துடன் தர் ணாவில் ஈடுபட்டனர். தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி, மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலா ளர்களை அடையாளம் கண்டு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும். இரண் டாண்டுகளில் 480 நாட்கள் பணி  முடிந்த ஒப்பந்தத் தொழிலாளர் களை அடையாளம் கண்டு, கரு ணைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு தமிழ்நாடு மின்ஊழி யர் மத்திய அமைப்பினர் செவ்வா யன்று குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.  கோவை சிவானந்தகாலனி, டாடாபாத் மின்வாரிய தலைமை  அலுவலகம் முன்பு நடைபெற்ற  போராட்டத்திற்கு, மின் ஊழியர் மத் திய அமைப்பின் தெற்கு வட்டக் கிளைத் தலைவர் பி. காளிமுத்து தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ் ணமூர்த்தி வாழ்த்தி பேசினார். இதில், மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநிலச் செயலாளர் டி. மணிகண்டன், கோவை மாநகர கிளைத் தலைவர் வி. மதுசூதனன், தெற்கு கிளைச் செயலாளர் என். ரத்னகுமார், வடக்கு கிளைத் தலைவர் எஸ்.சென்னியப்பன், செயலாளர் எம்.மணிகண்டன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். முடி வில் மாநகர் இணைச் செயலாளர்  ஜி.கோகிலவாணி நன்றி கூறினார்.  நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 300க் கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த  தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று, ஈரோடு மேற் பார்வை பொறியாளர் அலுவலகம்  முன்பு, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் எம்.ஆர்.பெரிய சாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம் போராட்டத்தைத் தொடங்கி வைத் தார். மின் ஊழியர் மத்திய அமைப் பின் மண்டலச் செயலாளர் சி. ஜோதிமணி மற்றும் பலர் ஊழியர் கள் கலந்து கொண்டனர். இதேபோல கோபியில் பி.சேகர் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. ஸ்ரீதேவி, பாண்டியன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.