திருப்பூர், செப். 1 - திருப்பூர் சின்னக்காளி பாளையத்தை சேர்ந்த பேச்சியம்மாள். அவருக்கு வயது 107. 1300 மூன்றாம் பிறைகளுக்கு மேல் கண்டவர். நான்கு தலைமுறை உறவுகள் சேர்ந்து திருப் பூரில் ஞாயிறன்று அவருக்கு கனகாபிஷேக விழாவை கொண்டாடினர். இன்னும் தன்னுடைய வேலையை தானே செய்து கொள்ளும் அளவுக்கு ஆரோக்கி யத்துடன் நடமாடிக் கொண்டிருக்கிறார். கம்பு, வரகு, திணை, கோதுமை இத்துடன் சிறிது அன்பையும் கலந்து வாழ்வியலோடு இணைத்துக் கொண்டதால் 107 வயதை கடந்தும் மன நிம்மதியோடு வாழ்கிறார். வரும் உறவுகள் அனைவரையும் அன் போடு அரவணைப்பதால் இவரது 107வது பிறந்த நாளைக் காண 600க்கும் மேற்பட்டோர் வந்து ஆத்தாவின் கனகாபிஷேகத்தில் நல் வாழ்த்துகளைப் பெற்றுச் சென்றனர். இவ ருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட் டது. பூட்டணார் பழனியப்பன் உன்னாத்தாள் தம்பதிகளில் இருந்து உருவான 600 க்கும் மேற்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர், இதில் தங்களது வாரிசுகளுடன் பங்கேற்று மகிழ்ந்தனர். காலையில் பரதநாட்டியம், வள்ளி கும்மி யாட்டமும் என பாரம்பரிய கலைகளை உற வுகளே ஆடிப் பாட, பாட்டி மகிழ்ந்து பார்த்து நெகிழ்ந்தார். தங்கள் குடும்பத்தில் ஆலம ரத்தின் அடி வேராக இருக்கும் இவருக்கு சிறப்பான ஒரு விழா எடுக்க வேண்டும் என்று உறவுகள் அனைவரும் பேச்சியம்மாள் 107 என்ற வாட்ஸ் அப் குழு மூலம் ஒரு வாரத்துக்கு முன்புதான் ஏற்பாடுகளை தொடங்கினர். பாட்டியின் அனுபவத்தையும், அவர் உறவு களை அரவணைத்த கதைகளை வாட்ஸ் அப்பில் பார்த்தபின் மிகவும் ஆர்வமடைந்த அனைத்து தலைமுறைகளும் அதிக அளவில் வந்துவிட்டனர். இதனால் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காமாட்சி அம் மன் திருமண மண்டபத்தை பிடித்து சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டது. காலை உணவு, மதிய விருந்து, வள்ளி கும்மியாட்டம், பரதம் என பல நிகழ்வுகள் இருந்தது. தங்களது தந்தை, தாயுடன் பிறந்த உறவுகளைத் தவிர இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட உறவுகள் தெரியாமல் உள்ள இளம் தலைமுறை உறவு பிள்ளைகளுக்கு உறவுகளை அறிமுகப்ப டுத்தினர். அத்துடன் அப்பா, அத்தை, மாமா சித்தப்பா, சித்தி உள்ளிட்ட தலைமுறையி னரும் ஒன்று கூடி இந்த நிகழ்வில் இத்தனை ஆண்டுகள் இருந்த மனக்கசப்புகளை நீக்கி ஒருவரோடு ஒருவர் அளவலாவி இனி ஒற்று மையாக இருப்பது என உறுதி ஏற்றுக் கொண் டனர். இதில் பங்கேற்ற இளம் தலைமுறையின ரும் அனைத்து சூழலிலும் ஒற்றுமையாக இருந்து உறவுகளை வழி நடத்தி, அடுத்து வரும் தலைமுறைக்கும் அறிமுகப்படுத்தி பழக்கி செல்வது என உறுதியேற்றுக் கொண் டனர். இன்றைய தலைமுறையினர் எதற்கெ டுத்தாலும் கோபப்படுதல் பேசுதல் என இருக் கும் சூழலில் நிதானத்தை கடைப்பிடித்து வாழ்ந்ததன் விளைவாகத் தான் இவர் 100 வயதைக் கடந்தும் வெற்றிகரமாக வாழ்க் கையை நடத்தி வருகிறார். எந்த ஒரு சூழ லிலும் நிதானத்தை கடைபிடிக்கும் அவர் கருநாகப் பாம்பு கடித்த போதும் நிதானத்தை இழக்காமல் அமைதியாக இருந்து தனது ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொண்டார் என்று கூறினார். நான்காம் தலை முறையைச் சேர்ந்த கொள்ளுப்பேத்தி கலை வாணி. இதேபோல் அவர்களது உறவி னர்கள் அனைவரும் பாட்டியை பற்றி நெகிழ்ச் சியாக நினைவுகளை பகிர்ந்து கொண்ட னர்.