சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நவ.20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.