தாராபுரம், நவ. 3 - அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற் றோர் நல அமைப்பிற்கு ரூ. 2 கோடி மதிப் புள்ள 17 சென்ட் நிலம் வழங்கிய ஓய்வூதி யருக்கு தாராபுரத்தில் பாராட்டு மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் தாராபுரம் கிளை சார்பில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கூடு தல் அலுவலக திறப்பு விழா, அமைப்பிற்கு பல்வேறு வகையில் உதவி செய்தவர்க ளுக்கு பாராட்டு விழா, டிஏ உயர்வு வழக்கு வெற்றி விழா ஆகிய முப்பெரும் விழா நடை பெற்றது. கிளைத் தலைவர் கே.வெள்ளைச்சாமி கொடி ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். அலு வலகத்தை ஆர்.சண்முகம் திறந்து வைத்தார். தகவல் பலகையை குடும்ப ஓய்வூதியர் கே.தனலட்சுமி முருகேசன் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தாராபுரம் சிவரஞ் சனி மண்டபத்தில் பாராட்டு விழா மற்றும் டிஏ உயர்வு வழக்கு வெற்றி விளக்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்புக்கு திருப்பூரில் ரூ. இரண்டு கோடி மதிப்புள்ள 17 சென்ட் இடத்தை தான மாக வழங்கியுள்ள தோழர் ஞ.கோபாலன் அவர்களை சிறப்பு செய்யும் நிகழ்வு மற்றும் பல்வேறு வகையில் உதவி செய்தவர்க ளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து கழகஓய்வூதியர்களுக்கு நீதிமன்றத்தால் டிஏ நவம்பர் மாதம் வழங் கப்பட வேண்டும் என்ற உத்தரவு குறித்து மாநில துணை தலைவர் ஆர்.சேது ராமன் விளக்கி பேசினார். அரசும், நிர்வாக மும், போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் நிலையும் என்ற தலைப்பில் மாநில துணை பொதுச் செயலாளர் பி.செல்வராசன் உரை யாற்றினார். இக்கூட்டத்தில் ஏராளமான ஓய் வூதியர் கலந்து கொண்டனர். டிஏ உயர்வு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்த ரவை அரசும் நிர்வாகமும் உடனடியாக அமு லாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.