districts

மோடிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் பிரச்சனை தீர்ந்து விடுமா?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண் ணாமலையும், திருப்பூர் தொகுதி யில் முருகானந்தமும் போட்டியிடு கின்றனர்.  பத்தாண்டு கால மோடி  ஆட்சியில் செய்த சாதனைகள் என சொல்லிக் கொள்வதற்கு எதுவும் இல் லாத நிலையில், வாய்க்கு வந்ததைப் பேசி, வாக்குறுதிகளை அள்ளி வீசி  வருகின்றனர். அதில் ஒன்று, அண் ணாமலையும், முருகானந்தமும் மோடியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இந்த தொகுதிக ளுக்குத் தேவையானதை நேரில் சந் தித்துப் பேசி பெற்றுத் தருவோம் என்பதாகும். கேட்பதற்கு இனிப்பாக இருக்கும் இந்த வார்த்தைகள் நம்பத் தகுந்தவை தானா? சரியான வாதம் தானா? மோடியுடன் நெருக்கமானவர் கள் என்றால் இப்போது வரை மோடி  தானே பிரதமராக இருக்கிறார்! இது வரை கோவை, திருப்பூர் தொகுதி சந் திக்கும் பிரச்சனைகளை அண்ணா மலையும், முருகானந்தமும் மோடியி டம் பேசியிருக்கிறார்களா? அப்படி இவர்கள் பேசியிருந்தால் இங்குள்ள  பிரச்சனைகளுக்கு மோடி என்ன நட வடிக்கை எடுத்தார் என்று சொல்ல வேண்டும்.  குறிப்பாக அண்ணாமலை கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளாக பாஜக மாநிலத் தலைவராக இருக்கி றார். அகில இந்திய அளவில் ஆளும்  கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் தமிழ்நாட்டில் எங்கு பிரச் சனை என்றாலும், அவர் மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டு மல்லவா? இதுவரை எதுவுமே செய் யவில்லையே, ஏன்? அதேபோல் ஆர்எஸ்எஸ் பேர்வழியான முருகா னந்தமும் மோடிக்கு நெருக்கமான வர் என்றால் இதுவரை என்ன செய் தார்? மோடியிடம் பேசி தீர்வு கண்ட பிரச்சனைகளைப் பட்டியலிடத் தயாரா? தேர்தல் பிரச்சாரம் தொடங்கி பல நாட்கள் கடந்துவிட்டது, இது வரை இருவரும் மோடியிடம் பேசி இந்த தொகுதிகளில் செய்து தந்த சாதனைகள் என்று எதையுமே சொல்லவில்லை. எதாவது இருந் தால்தானே சொல்வதற்கு? மேலும் இவர்கள் முன்வைக்கும் வாதம் சட்டப்படியும் தவறானது. ஒரு நாடாளுமன்றத் தொகுதி உறுப் பினராக எந்த கட்சியைச் சேர்ந்த வர்கள் வெற்றி பெற்றாலும், ஆட்சி யில் இருப்பவர்கள் அவர்களது கருத் துகளை, கோரிக்கைகளை கட்சி வித் தியாசங்களுக்கு அப்பால் கவனித் துக் கேட்க வேண்டும். நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்படும் போது, விமர்சனங்களை தெரிவிக் கும் போது அவற்றை காது கொடுத் துக் கேட்டு உரிய தலையீடு செய்ய வேண்டும்.  குறிப்பாக கோவை, திருப்பூர் இரண்டு நாடாளுமன்றத் தொகுதி களிலும் பி.ஆர்.நடராஜன், கே.சுப்ப ராயன் ஆகியோர் கடந்த ஐந்தாண்டு காலமாக எம்.பி.க்களாக இருந்தனர். பாஜக ஆட்சியாக இருந்தாலும் இவர் கள் கம்யூனிஸ்ட் எம்.பி.க்களாக இருந்தபோதும் அவர்கள் சொல்லும் கருத்துக்களை மோடி அரசு காது கொடுத்துக் கேட்டிருக்க வேண்டும்.  நாடாளுமன்றத்தில் பல முறை பி. ஆர்.நடராஜனும், கே.சுப்பராயனும் கோவை, திருப்பூர் தொகுதிகளின் பல்வேறு பிரச்சனைகளை குறிப்பாக இந்த மண்டலத்தில் இருக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் ஜிஎஸ்டி வரியினால் பாதிப்பைச் சந்திப்பது, பஞ்சு நூல் விலை உயர்வினால் ஜவுளித்தொழில் நெருக்கடியைச் சந்தித்தது உள்ளிட்ட பிரச்சனை களை முன்வைத்து பேசியிருக்கின்ற னர். ஆனால் மோடி அரசு காது கொடுத்துக் கேட்கவில்லையே! மாறாக சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு எதிரான கொள்கைக ளையே கண்மூடித்தனமாக அமல் படுத்தினர்.  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல்களை செவி மடுக்காத சர்வாதி கார மனப்பான்மை கொண்டதாக மோடி அரசு செயல்பட்டது.

இந்த பின் னணியில் அண்ணாமலை, முருகா னந்தத்தின் வாதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல்களை நாங் கள் காது கொடுத்துக் கேட்க மாட் டோம், மோடிக்கு நெருக்கமானவர் களான நாங்கள் வெற்றி பெற்றால் தான் இங்குள்ள பிரச்சனைகளைப் பேசித் தீர்வு காண்போம் என்பது ஜன நாயக விரோதமானது. இது ஒரு  வகையில் தொகுதி வாக்காளர்களை மிரட்டாமல், மிரட்டி தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என நிர்பந் தப்படுத்துவதாகும்.  மேலும் மோடிக்கு நெருக்கமா னவர்கள் என்பதால் நாங்கள் மோடி யிடம் நேரடித் தொடர்பு கொண்டு இந்த தொகுதி பிரச்சனைகளைத் தீர்ப்போம் என்று சொல்கின்றனர். 2014 ஆம் ஆண்டு மோடியே நேரடி யாக இங்குள்ள தொழில் துறையின ருக்கு வாக்குறுதி அளித்தார். அவர் நேரடியாக வாக்குறுதி கொடுத்தே எதுவும் நடக்கவில்லை. இப்போது அவருக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லி இவர்கள் உறுதி கொடுக்கின்றனர். அவரையே நம்ப முடியாது எனும்போது, அவரது அடிப் பொடிகளை எப்படி நம்புவது? இதையெல்லாம் விட இன் னொரு விசயம் இருக்கிறது. மோடி ஆட்சியே வெற்றி பெறப் போவ தில்லை. மோடியின் ஆட்சி வீழும் நிலையில், மோடிக்கு நெருக்கமான அண்ணாமலையும், முருகானந்த மும் என்ன சாதிக்கப் போகிறார்கள்? கோவை, திருப்பூர் தொகுதி வாக்கா ளர்கள் அப்பாவித்தனமாக நம்பி  விடுவார்கள் என்று அண்ணாமலை யும், முருகானந்தமும் நயவஞ்சக மாகப் பேசுகிறார்கள். என்ன வேடம் போட்டு வந்தாலும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே, கோவையிலும், திருப்பூரிலும் பாஜக தோற்கப் போவது சர்வ நிச்சயம்!  -வே.தூயவன்