மேட்டுப்பாளையம், டிச.19- மாறிவரும் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அதனை தாங்கி வளரக்கூடிய புதிய ரக பயிர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் வேளாண் பல்கலை கழகம் ஈடு பட்டுள்ளது என வேளாண் பல் கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி மேட்டுப்பாளையத் தில் பேட்டி அளித்தார். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் - கோத்தகிரி சாலையில் கோவை வேளாண் பல்கலைக்கழ கத்தின் கீழ் இயங்கும் அரசு வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் வியாழனன்று வேளாண் காடுகள் கூட்டமைப்பின் 7 ஆவது வருடாந்திர இரண்டு நாட்கள் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் நிஹார் ரஞ்ஜன் தலை மையில் துவங்கியது. இந்த கருத் தரங்கில் கோவை வேளாண் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய பிர தேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய வன மேலாண்மை நிலை யத்தின் இயக்குநர் முனைவர்.ரவிச் சந்திரன் ஐஎப்எஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வேளாண் காடுகள் கூட்டமைப் பினை உருவாக்குதல், செயல்பாடு கள், பங்களிப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தில் அதன் இன்றி யமையாமை குறித்தும்,தலைமை விருந்தினருக்கான உரையாற்றி னார். மேலும், காடுகளின் முக்கியத் துவம், காடுகளின் பரப்பளவை அதி கரித்தல், மாறி வருகின்ற கால நிலை மாற்றத்திற்கு காடுகளின் பங்கு குறித்தும், காடுகளிலுள்ள மரங்களிலிருந்து தயாரிக்கப்படு கின்ற மருத்துவ குணம், நறுமண மிக்க சோப்புகள், சவர்க்காரம், அழகு சாதனப்பொருட்கள், ஊது பத்திகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் குறித்தும், வனப் பொருட்களின் சந்தை வாய்ப்பினை குறித்தும் சிறப்பு விருந்தினர்கள் எடுத்துரைத்தனர். துவக்க விழாவில் வேளாண் காடுகள் கூட்டமைப்பின் ஆவணங் கள் மற்றும் பிரசுரங்கள் வெளியீடு, உறுப்பினர் சான்றிதழ் வழங்குதல், காசோலையை ஒப்படைத்தல் மற் றும் உறுப்பினர்கள் பாராட்டி கெளர விக்கப்பட்டனர். புதிய மரம் வளர்க் கும் திட்டமும் துவங்கப்பட்டது.
கார்பன் நிதி திட்டத்திற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் புது டெல்லியில் உள்ள ஆற்றல் மற்றும் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தா னது. இக்கருத்தரங்கில் சுமார் 400க் கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் மேட்டுப் பாளையம் வனக்கல்லூரியின் முன்னாள் முதல்வரும், வனக்கல் லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தின் வனவியல் துறையின் பேராசிரி யருமான பார்த்திபன் அறிமுக உரையாற்றினார். பேராசிரியர் ஐ. சேகர் நன்றியுரை ஆற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களி டம் பேசிய வேளாண் பல்கலை கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, மாறிவரும் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப அதனை தாங்கி வளரக்கூடிய புதிய ரக பயிர்களை கண்டுபிடிக் கும் முயற்சியில் வேளாண் பல் கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. குறைவான நீரை பெற்று அதிக மக சூல் தரும் புதிய ரக பயிர்களை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கிராம அளவில் தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப வேளாண்மை செய்ய தகுதியுள்ள கிராமங் களை தத்தெடுத்து அந்த திட்டங் களை மக்களிடையே கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இனிவரும் காலங் களில் எவ்வளவு சவாலான சூழல் கள் வந்தாலும் அதனை சமாளிக்க கூடிய வகையில் வேளாண் பல் கலையில் ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டு அதனை விவசாயி களுக்கு விரிவாக்கம் செய்து கொண்டுள்ளோம், என்றார்.