districts

img

திருப்பூரில் ஸ்மார்ட் ஆகாத பேருந்து நிலையம் கொட்டிக்கிடக்குது எண்ணற்ற பிரச்சனைகள்

திருப்பூர், ஆக.22 - திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. பார்ப்ப தற்கு பிரம்மாண்டமாக உள்ள இந்த பேருந்து  நிலையத்தில் ஓராயிரம் பிரச்சனைகள் உள்ள தாக பயணிகள் தெரிவித்தனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம்  கடந்த அதிமுக ஆட்சியில் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும்  பணி தொடங்கப்பட்டு மந்தகதியில் நடை பெற்றது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு பணிகளை விரைந்து முடித்து சில  மாதங்களுக்கு முன்பு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்நிலையில், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகள் செயல்பாடில்லாமல் நகராமல் நிற்கின்றன. பேருந்து நிலையத்தின் உள்ளேயே குப்பை ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. எங்கு சென்றாலும் மோசமான துர்நாற்றம் வீசுகிறது. தாய்மார்கள் பாலூட்டும் அறை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் கழி வறை முன்பு ஆண்கள் பலர் படுத்துள்ளனர்.  குடிநீர் வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகில்  பலர் சிறுநீர் கழித்துள்ளனர். பல இடங்க ளில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்தொற்று ஏற்படும்  அபாயம் உள்ளது. கண்ணுக்குப் புலப்படாத  இடத்தில் நகர பேருந்து அறிவிப்பு பலகைகள்  வைக்கப்பட்டுள்ளன. இதனால் முதியவர் கள் பலர் பேருந்தில் ஏறுவதில் சிரமம் ஏற்படு கிறது. கழிவறைகள் இருந்தும் திறந்தவெளி யில் சிறுநீர் கழிக்கிறார்கள். இது பெண்க ளுக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்துகிறது என்று  பயணிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு களை முன்வைத்தனர். இதுகுறித்து  பேருந்து நிலைய தூய்மைப் பணி மேற்பார்வையாளர் ரவி கூறுகையில், பேருந்து நிலையத்தில் காலை 6 தூய்மை  பணியாளர்கள், மதியம் 7 பணியாளர்கள், இரவு 6 பணியாளர்கள் தூய்மை பணியில்  ஈடுபடுகின்றனர்.

குப்பை எடுத்துச் செல்லும்  பேட்டரி வாகனம் பழுந்தடைதுள்ளதால், கடந்த ஒரு வார காலமாக குப்பை முழுமை யாக எடுக்க முடியவில்லை. இரவு நேரம் மாந கராட்சி வாகனத்தில் முடிந்தவரை எடுத்து  செல்கிறோம். இதுகுறித்து மாநகராட்சிக் கும், ஒப்பந்ததாரருக்கும் தகவல் தெரிவிக்கப் படுள்ளது. இன்னும் மூன்று நாட்களுக்குள் குப்பைகள் அப்புறப்படுத்தப்படும். பேருந்து  நிலையத்தின் உள்ளேயே பலர் இரவு நேரங்க ளில் குடித்துவிட்டு சமூக விரோத செயல்கள்  ஈடுபடுகின்றனர். மேலும் தாய்மார்கள் பாலூட்டும் அறையின் அருகிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழித்து வைக்கின்றனர். முடிந் தவரை காலையில் இப்பகுதியில் தண்ணீர்  அடித்து கழுவி டெட்டால் தெளிக்கிறோம், இருந்தும் துற்நாற்றம் வீசுகிறது. இது போன்ற  சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்ற வர்களை அப்புறப்படுத்தும் அதிகாரம் எங்க ளுக்கு இல்லை. இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்துள்ளோம் என்று தெரிவித்தார். “ஒய்யாரக் கொண்டையாம், தாழம்  பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும், பேனும்”  என்ற பழமொழிதான் முத்தமிழறிஞர் டாக்டர்  கலைஞர் பேருந்து நிலையத்தைப் பார்த்தால்  நினைவுக்கு வருகிறது. உண்மையிலேயே ஸ்மார்ட் பேருந்து நிலையமாக இருப்பதற் கான அனைத்து நடவடிக்கைகளையும் மாந கராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து பயணிகளின் எதிர் பார்ப்பாக உள்ளது.