districts

img

சாதியை காரணம் காட்டி மாணவியிடம் பாரபட்சம்: தயார் புகார்

கோவை, செப்.25- சாதியை காரணம் காட்டி மாண விக்கு பள்ளியில் இரண்டாம் பரிசு வழங்கிய தலைமையாசிரியர் மற் றும் ஆசிரியர் ஆகியோர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் மாணவி யின் தாயார் ஆட்சியர் அலுவலகத் தில் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் பெண் ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், சூலூர் ராசிபாளையத்தைச் சேர்ந்தவர் இந் திராகாந்தி. மகள் ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகி றார். இந்நிலையில், ஆக.15 ஆம் தேதியன்று சுதந்திர தினத்தை முன் னிட்டு அப்பள்ளியில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, ஐந்தாம் வகுப்பு படிக் கும் இந்திராகாந்தியின் மகள் பேச்சுப்  போட்டியில் கலந்து கொள்வதற்காக பெயர் கொடுத்து. தன் மகளைத் தவிர ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த யாரும் பேச்சு போட்டியில் கலந்து கொள் ளாத நிலையில், சுதந்திர தினத்தன்று நடத்த வேண்டிய போட்டியானது முன்னதாகவே நடத்தப்பட்டதாகவும் அதில், பேச்சுப் போட்டியில் தனது  மகள் ஒருவர் மட்டுமே கலந்து கொண் டார். இந்நிலையில், தலைமை ஆசி ரியர் சாதியை காரணம் காட்டி பேச்சுப் போட்டியில் பங்கேற்காத வேறு மாணவிக்கு முதல் பரிசையும் தனது  மகளுக்கு இரண்டாவது பரிசையும் அளித்துள்ளார் என புகார் அளித்துள் ளார். மேலும், இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது தன்னை யும், தன் மகளையும் இழிவுபடுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ள னர். சாதியின் அடிப்படையில் பரிச ளித்தது வேதனை அளிக்கிறது. எனவே, தலைமையாசிரியர் நிர்மலா  ஆரோக்கிய மேரி மற்றும் ஆசிரியர் சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக, பாதிக்கப்பட்ட மாண வியின் தாயார் ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளிக்கையில், தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட் டச் செயலாளர் வழக்கறிஞர் ஆறுச் சாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உட னிருந்தனர்.