மேட்டுப்பாளையம், டிச.10- குரும்பனூர் தரைப்பாலம் சேத மாகி நான்காண்டுகளாகியும் சரி செய்யப்படாமல் உள்ளதை கண் டித்து அப்பகுதி பொதுமக்கள் ஊருக்குள் கருப்புக்கொடி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அருகே உள்ள குரும்ப னூர் கிராமத்தில் தேக்கம்பட்டி ஊராட்சி மற்றும் சிக்கதாசம்பாளை யம் ஊராட்சியை இணைக்கும் சாலையில் மழைநீர் வடிகால் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சி எல் லையில் அமைந்துள்ள போக்கு வரத்து முக்கித்துவம் வாய்ந்த இத் தரைப்பாலத்தின் வழியே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பல் வேறு கிராமங்களில் விளையும் வேளாண் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், பால் உள் ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் மற் றும் உள்ளூர் மக்கள் பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். நகர பகுதியினையும், கிராமப்புறங்க ளையும் இணைக்கும் முக்கியத்து வம் வாய்ந்த இச்சாலையில் உள்ள தரைமட்டப்பாலம் கடந்த நான் காண்டுகளுக்கு முன்பே சேதம டைய துவங்கிவிட்டது.
தரைப்பா லத்தின் மேல் பகுதி முழுவதும் சிதிலமடைந்து, மழைக்காலங்க ளில் அவ்வழியே செல்லும் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து, மண் அரிப்பு ஏற்பட்டு அவ்வழியே வாகனங்கள் கடந்து செல்ல இய லாமல் போக்குவரத்து துண்டிக் கப்படும் நிலை ஏற்பட்டது. இதுதொ டர்பாக பல முறை கோரிக்கை மனுக் கள் அளித்தும் சேதமடைந்த பாலத்தை சம்பந்தப்பட்ட துறையி னர் நான்காண்டுகளாக கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் முதல் மேட்டுப் பாளையம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பலமுறை இத்தரைப்பாலம் வழியான சாலை போக்குவரத்து தடைபட்டது. இந்நி லையில், தங்களது வேதனையை வெளிப்படுத்தும் விதமாக பேனர் வைத்த குரும்பனூர் கிராம மக் கள் தங்களது எதிர்ப்பு மற்றும் கோரிக்கையினை வலியுறுத்தும் விதமாக ஊருக்குள் கருப்புக்கொ டிகளை கட்டி வைத்துள்ளனர். மழை பெய்யும் போதெல்லாம் போக்குவரத்து தடைபட்டு கடும் அவதி ஏற்படுவதாகவும், இவ்வ ழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வரு வதாகவும் அப்பகுதி மக்கள் தெரி வித்துள்ளனர். எனவே, விரை வில் சேதமான தரைப்பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் கட்டத்தர வேண்டும் என வலியுறுத்தி யுள்ளனர். இதுகுறித்து தொடர்பு டைய காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, “சேத மடைந்த குரும்பனூர் தரைப்பா லத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக” தெரிவித் தனர்.