districts

img

எமரால்டு காவல் நிலையத்திற்குள் புகுந்த கரடி

உதகை, டிச.6- மஞ்சூர் பகுதியிலுள்ள எம ரால்டு காவல் நிலையத்திற்குள் கரடி புகுந்ததால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகை, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஓவேலி, மஞ்சூர் உள்பட 65 சத விகிதத்திற்கும் அதிகமாக வனப் பகுதிகளை கொண்டு உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வனவிலங் குகள் அதிகளவில் ஊருக்குள் புகுந்து பொருட்களை சேதப் படுத்தி வருகின்றன. குறிப்பாக குன் னூர், கோத்தகிரி பகுதிகளில் கரடி, சிறுத்தை நடமாட்டமும், கூடலூர் பகுதியில் காட்டு யானை நடமாட் டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஞ்சூர் பகு தியில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த கரடி கூண்டு வைத்து பிடிக்கப் பட்டு மாவனல்லா வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் தற் போது மீண்டும் ஒரு கரடி எமரால்டு பகுதியில் சுற்றி திரிவது தெரிய வந்துள்ளது. கடந்த டிச.3 ஆம் தேதி இரவு ஒரு மணியளவில் எமரால்டு பகுதி யில் சுற்றித்திரிந்த கரடி காவல் நிலையம் அருகே வந்தது.

அப் போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் கரடியை பார்த்து காரை நிறுத்தினார். அப்போது கரடி உடனடியாக எமரால்டு காவல் நிலையத்திற்குள் புகுந்து விட்டது. காவல் நிலைய வளாகம் முழு வதும் நடைபோட்டது. அந்த நேரத்தில் காவலர்கள் யாரும் இல்லாததால் எந்தவித அசம்பா விதமும் ஏற்படவில்லை. இது குறித்து வாகன ஓட்டி மறுநாள் காவல் நிலையத்தில் தகவல் தெரி வித்தார். இதன்படி போலீசார் கண் காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கரடி பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்துவிட்டு இறு தியாக காவல் நிலையத்திற்குள் புகுந்து தப்பி சென்றது தெரிய வந் தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், காவல் நிலையம் மற்றும் அந்த பகுதியில் உள்ள வீடு களில் இரவு நேரங்களில் கதவு மற் றும் ஜன்னல்களை திறந்து வைக்க  வேண்டாம் எனவும், கதவு, ஜன்னல் கள் பூட்டப்பட்டு இருந்து, கதவை தட்டும் சத்தம் கேட்டாலும் யார்  என விசாரிக்க உடனடியாக கத வைத் திறக்க வேண்டாம் என வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ள னர்.