districts

img

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 6 ஆயிரம் பேர் காத்திருப்பு

கோவை, ஆக. 12- தமிழகத்தில் 6 ஆயிரம் பேர்  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக் காக காத்திருப்பதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று சிகிச்சை ஆணை யத்தின் செயலாளர் கோபால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தமிழ் நாடு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை ஆணையம் சார்பில் உடல்  உறுப்புதானம் குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் நடைபெற்றது.  எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்ட ளையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மி நாராயணசுவாமி தலை மையில் நடைபெற்ற இந்த விழிப் புணர்வு நிகழ்ச்சியில், ஆயிரத் திற்கு மேற்பட்ட மாணவ-மாணவி கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி யில், தமிழ்நாடு உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் உறுப் பினர் செயலாளர் கோபால கிருஷ்ணன் கலந்து கொண்டு உடல்  உறுப்பு தானம் செய்வதன் அவ சியம் குறித்து மாணவர்கள் மத்தி யில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இந்த கால கட்டத்தில் உடல் உறுப்புகள் செயலிழப்பது அதிக மாகிவிட்டது. சிறு நீரக கோளா றுகளும் செயலிழப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. கேன் சர், ஹைபர் டென்சன், இருதய  கோளாறுகள், சர்க்கரை வியாதி  உள்ளிட்ட நோய்களால் பலர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த  நோய்கள் நம்மை பயமுறுத்தி  வருகின்றன. நான் மாணவனாக  இருந்த போது இத்தகைய நோய் கள் பணக்காரர்களுக்கு மட்டும்  வரும் நோயாக இருந்தது. இப் போது கிராமப்புறங்கள் தொடங்கி  அனைத்து பகுதி மக்களும்  இவ்வகை நோய்களால் பாதிக் கப்படுகின்றனர். இந்தியாவில், தமிழகம் மற்றும்  கேரளாவில் தான் சர்க்கரை வியாதி  உள்ள நபர்கள் அதிகமாக உள்ளனர்.   நாம் நமது வாழ்கை  முறையில் ஏற்பட்டுள்ள முன்னோற் றத்தை பக்குவமாக கையாள்வ தில்லை. சமச்சீரான சரிவிகித உணவை நாம் எடுத்துக் கொள் வதில்லை. தீய பழக்கங்களும் நம்மிடம் சேர்ந்துவிட்டன. 1.5 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் உடல் உறுப்புகள் செயலிழந்து வரு வோர்க்கு சிகிச்சையை மேற் கொள்வது கடினம். 

ஒவ்வொரு ஆண்டும் வெப்பம்  அதிகரித்துக் கொண்டே வருகி றது. இதனால் சிறுநீரகம் உட்பட உடல் உறுப்புகள் செயலிழந்து  போவதுண்டு. காற்று மாசுபாடும்  அதிகரித்து வருகிறது. ரசாயனங் கள் நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்டது. விவசாயத்தில் ரசானங் கள் அதிகமாக பயன்படுத்தப்படு கிறது என்றார்.   இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வருவோர் எண்ணிக்கை மிக  குறைவாக உள்ளது. அதே நேரத் தில் தானமாக கொடுக்க முன் வருவோர் உடல் தகுதி சரியாக இருப்பதில்லை. இதனால் மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப் படுகிறது.  ஒரிவரிடம் கிடைக்கும்  தானம் மூலமாக 7 முதல் 8 பேர்  பயனடை கின்றனர். உடல் உறுப்பு  தானத்தில் தமிழகம் இந்தியாவி லேயே முன்னோடி மாநில மாக உள்ளது.

சமீபத்தில் இதற் கான சான்றிதழை மத்திய  அரசிடம் இருந்து பெற்றுள்ளோம்.  தமிழகத்தில் 13 தனியார்  மருத்துவமனைகளிலும், 27 அரசு  மருத்துவமனைகளில் உடல்  உறுப்புகள் மாற்று அறுவை  சிகிச்சை நடைபெறுகிறது. இத னால் தமிழகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன் னோடியாக உள்ளது.   உலகில் ஸ்பெயின் நாடு தான்  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை யில் முன்னோடியாக உள்ளது. தற் போது தமிழகத்தில் 6 ஆயிரம் பேர்  சிறு நீரகத்திற்காகவும், கல்லீர லுக்காக 750 முதல் 850 பேரும் காத்திருக்கின்றனர். இவை தவிர இருதயம், கணயம், சிறுகுடல் தேவைப்படுவோரும் உள்ளனர். மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை பெறுவதற்கு சட்ட திட்டங்கள் மிக தெளிவாக வரை யறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு உறுப்பு மாற்று சிகிச்சை ஆணை யத்தின் மேற்பார்வையில், மருத் துவ குழுவினரிடம் இருந்து இரண்டு மருத்துவ குழுவினர் 6  மணி நேர இடைவெளியில் சான்றி தழ்கள் பெற்ற பிறகே உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது. உறுப்பு கள் வேண்டி பதிவு செய்தவர்கள் வரிசையாக உறுப்புகள் தானமாக வழங்கப்படுகின்றன.  மூளைச்சாவு அடைபவர்கள் எண்ணிக்கை குறித்த ஊடகவிய லாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், கடந்த காலங்களில்  மூளைச்சாவு கண்டறியப்படாமல் இருந்தது. தற்போது அதிக அள வில் கண்டறியப்படுகிறது. இது  தான் மூளைச்சாவு அடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக தோன்று வதற்கான காரணமாக உள்ளது. மருத்துவ குழுவினர் ஆய்வுக்கு பிறகு உறுப்பு தானம் நடப்பதால் இதில் எவ்வித தவறுகளுக்கும் இடம் இருக்காது என்றார்.