தருமபுரி, ஜூலை 24- பாலக்கோட்டை அடுத்துள்ள மாரண்டஅள்ளியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ் டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதி காரிகள், கடைகளுக்கு அபராதம் விதித் தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவில் உணவு பாதுகாப்பு அலுவ லர் நந்தகோபால் தலைமையிலான அதி காரிகள் மாரண்டள்ளியில் ஆய்வு மேற் கொண்டனர். மாரண்டஅள்ளி - கொர வண்டள்ளி சாலை, நான்கு ரோடு, பஞ் சப்பள்ளி சாலை மற்றும் வெள்ளிசந்தை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், உணவகங்கள், பேக்கரி கள், தேநீர் பலகார கடைகள், பெட்டி கடைகள் காய்கறி, பழ கடைகள் மற் றும் உணவு சாராத துணி கடைகள் எலக் டிரிக், பூ கடைகள் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், தமிழக அரசால் தடை செய் யப்பட்ட சுமார் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த கடைகளுக்கு அபரா தம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, ஒரு பழக் கடையில் ரசாயன முறையில் பழுக்க வைத்த 250 கிலோ அளவிலான பழங் கள், சில கடைகளில் காலாவதியான தின்பண்டங்கள், மளிகை பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப் பட்டு, அபராதத்தை அதிகாரிகள் விதித்து எச்சரித்தனர்.