டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க திட்டம்: 4 பேர் கைது
கோவை, பிப்.15- புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயிலை சேர்ந்த ஒருவர் சரவணம்பட்டி பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். செவ்வாயன்று காலை இவரது கடை அருகில் நின்றிருந்த 4 பேர் கொண்ட கும்பல் கீரணத்தத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி ஆலோசனை நடத்தி கொண்டிருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கேட்ட பெட்டிக்கடை உரிமையாளர் சரவணம் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது கோவை, கணபதி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த கவுரி சங்கர் (24), சுகந்திரம்(23), சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்த ரித்திக் (19) மற்றும் கணபதி, நாடார் தெருவை சேர்ந்த ஜெகதீஷ் (30) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர் களிடமிருந்து ஒரு வாள், ஒரு அரிவாள் மற்றும் இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப் பட்ட 4 பேரையும், போலீசார் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது கோவை காவல் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தடுப்பணை பகுதியில் முதலை நடமாட்டம்
தாராபுரம், பிப்.15- அமராவதி ஆறானது உடுமலைபேட்டை அமராவதி அணையில் துவங்கி தாராபுரம் வழியாக கடைமடை பகுதியான கரூர் சென்று அடைகிறது. இந்த பழைமை வாய்ந்த அமரா வதி ஆற்றில் தினசரி குளிப்பதற்காகவும், துணி துவைப்பது, விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஆற்றில் இறங்கி தண்ணீரில் நீந்தி பொழுது போக்குவது வாடிக்கை யாகும். இந்நிலையில் கடந்த 6 மாத கால மாக அமராவதி ஆற்றில் தாராபுரம் அடுத்த சீத்தக்காடு பகுதி மற்றும் தாளக்கரை பகுதி யில் முதலை இருப்பதாக சமூக வலைத்தளங் களில் பரவியது. இதனால் இப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில், தாராபுரம் நகராட்சி நீரேற்றும் நிலையம் உள்ள தடுப்பணை பகுதி யில் முதலை நீந்தும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும் இதை உறுதி செய்யும் வகையில் தாராபுரம் நகராட்சி சார்பில் நகராட்சி நீரேற்று நிலை பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலை நடமாடுவதாக கூறப்படும் பகுதிகளில், சம்பந்தப்பட்ட துறை யினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆய்வு செய்து, பொதுமக்கள் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை: கரடி தாக்கி ஒருவர் காயம்
கோவை, பிப்.15- கோவை, ஆனைமலை புலிகள் காப்ப கத்தில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணிமேடு முதல் பிரிவில் பணி புரிபவர் புஸ்பராஜ்(53). இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் மேற்பார்வையாள ராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் பண்ணிமேடு 22ஆம் நெம்பர் காட்டில் பணியில் ஈடுபட்டிருந்த போது, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி அவரு டைய இடது காலை கடித்து குதறியது. இவர் அலறல் சத்தம் கேட்டு உடன் இருந்த பணி யாளர்கள் சத்த மிட்டதால் கரடி ஓடி சென் றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், புஸ்பராஜை மீட்டு, உருளிக்கல் மத்திய பொது மருத்துவமனைக்கு தனியார் வாக னத்தில் கொண்டு சென்றனர். பகல் நேரத்தில் தேயிலைத் காட்டிற்குள் பதுங்கியிருந்து தாக்கியதால், தேயிலைத் தோட்ட தொழி லாளர்கள் அச்சத்தில் பணி புரிந்து வரு கின்றனர்.
கோவையில் என்ஐஏ சோதனை
கோவை, பிப்.15- கோவையில் 10க்கும் மேற்பட்ட இடங் களில் தேசிய புலனாய்வு (என்ஐஏ) அதிகாரி கள் சோதனை மேற்கொண்டனர். கோவை, உக்கடம் அடுத்த கோட்டை ஈஸ்வரன் கோயிலின் முன்பு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமீஷா முபீன் என் பவர் பலியானார். இச்சம்பவத்தை தொடர்ந்து வழக்கை விசாரணை செய்து வரும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகா ரிகள், இவ் வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் நடைபெற்று வரும் தொடர் விசாரணையை தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ வினர் சோதனை மேற்கொண்டனர். கோவையில் கரும்புக்கடை, உக்கடம், குனியமுத்தூர் பகுதியில் உள்ள பிருந்தாவன் நகர், பொள்ளாச்சி அடுத்த டி காலனி உள்பட 10 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோன்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரண்டு இடங்களில் என்.ஐ. ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். உமரி காட்டேஜ் மற்றும் ஓட்டுப் பட்டறை பகுதிகளில் உள்ள ஆட்டோ ஒட்டுநர் மற்றும் உமரி காட்டேஜ் பகுதியில் உள்ள பெயிண்டர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், இரு வரது செல்போனை என்ஐஏ அதிகாரிகள் வாங்கி சென்றுள்ளனர். இவர்கள் இரு வரையும் கோவைக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு பகத்சிங் சிலம்ப குழு மாணவி தேர்வு
திருப்பூர், பிப்.15- மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிக ளுக்கு தகுதி சுற்றுகள் மாவட்ட அளவில் நடைபெற்று வரு கிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற தீபா ஸ்ரீ மற்றும் முகமது கபூர் மாநில அளவி லான முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்பட் டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில், பகத்சிங் சிலம்ப குழு, சேகுவாரா சிலம்ப குழு மற்றும் ஜிகினா சிலம்ப குழு சார்பில் 20 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பகத்சிங் சிலம்ப குழு வினை சார்ந்த க.தீபா ஸ்ரீ ஒற்றை கம்பு பொது பிரிவில் முதலிடம் பெற்றார். கல்லூரி பிரிவில் சே குவேரா சிலம்ப குழுவினை சேர்ந்த சந்தியா இரட்டை கம்பு வீச்சு பிரிவில் 3 ஆம் இடம் வெற்றி பெற்றார். ஜிகினா சிலம்ப குழுவினை சார்ந்த முகமது கபூர் பள்ளி பிரிவில் மான் கொம்பு பிரிவில் 3 ஆம் இடத்தை யும் அலங்கார பிரிவில் 2 ஆம் இடத்தையும், இரட்டை கம்பு வீச்சு பிரிவில் முதல் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றார். இதில் பொது பிரிவில் முதலிடம் பிடித்த தீபா ஸ்ரீ மற்றும் பள்ளி பிரிவில் இரட்டை கம்பு வீச்சு பிரிவில் முதலிடம் பிடித்த முக மது கபூர் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட் டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்கள்.
மின்தடை அறிவிப்பு
உடுமலை, பிப்.15- உடுமலைப்பேட்டை தாலுகா, இந்திரா நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு வேலை கள் நடைபெறவுள்ளதால் 16 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று என்று மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மின் தடைப்படும் பகுதிகள்: உடுமலை மின்நகர், சின்னப்பன்புதூர், ராஜாவூர், ஆவல் குட்டை, சேரன்நகர், குமாரமங்கலம், தாந்தோனி, வெங்கிட் டாபுரம், தூங்காவி, மெட்ராத்தி, இராமேகவுண்டன்புதூர்.
ரூ. 1 கோடிக்கு பருத்தி ஏலம்
தாராபுரம், பிப்.15- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமார் ரூ. 1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங் குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 8 ஆயிரத்து 656 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 6 ஆயிரத்து 700 க்கும் சராசரி விலையாக ரூ. 7 ஆயிரத்து 850 க்கும் விலை போனது. மொத்தம் 3944 மூட்டைகள் 1 ஆயி ரத்து 30 குவிண்டால் பருத்தி ரூ. 99 லட்சத்து 58 ஆயிரத்து 717 க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 15 வணிகர்கள் பங் கேற்றனர். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
ரூ.1 லட்சத்தி 50 ஆயிரத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, பிப்.15- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.1 லட்சத்தி 50 ஆயிரத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், 44 மூட்டைகள் வந்திருந்தன.குவிண் டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.8,000 முதல் ரூ.8,300 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,500 முதல் ரூ.7,800 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,100 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1லட் சத்தி 50 ஆயிரத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 4 வியாபா ரிகள், 12 விவசாயிகள் பங்கேற்றனர்.
சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது
திருப்பூர் பிப்.15- குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் இருந்த சாலைகளை சீர மைக்கும் பணி செவ்வாயன்று தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட போயம்பாளையம் முதல் கூத்தம்பாளையம் வரை பாதாள சாக்கடை செல்வதற்கு குழாய் அமைக்கும் பணி பல மாதங் களாக நடைபெற்று வந்தது. இந்த பணி செய்வதற்காக தோண் டப்பட்ட குழிகள் பல மாதங்களாக சரிவர மூடப்படாமல் காணப்பட்டது. இந்த பி.என்.சாலை திருப்பூர் செல்வதற்கு முக்கிய சாலை என்பதால் காலை நேரங்களில் போக்குவ ரத்து நெரிசல் அதிகரித்தது. மேலும் சாலை குண்டும் குழியு மாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள் ளாகி வந்தனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டவாறு இருந்தது. இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு கள் பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் இது குறித்து முறையிட்டுள்ளனர். இந்நிலையில் செவ்வாயன்று பாண்டி நகர் பகுதியில் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட் டுள்ளது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் போதுமான பணியாளர்களை நியமனம் செய்ய கோரிக்கை
திருப்பூர், பிப்.15- பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் போதுமான பணி யாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணா்வு இயக்கம் சார்பில், கலந்துரையாடல் மற்றும் பொது மக்கள் குறை கேட்பு கூட்டம் தலைவர் மணிக்குமார் தலைமையில் செவ்வாய்க்கி ழமை நடைபெற்றது. இதில், பல்லடம் வட்டாட்சியா் அலுவல கத்தில் போதுமான பணியாளா்கள் இல்லாததால் மக்களின் மனுக்கள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே, போதுமான பணி யாளர்களை நியமிக்க வேண்டும். சமையல் எரிவாயு உருளை ரசீது தொகைக்கு மேல் கூடுதல் பணம் கேட்டு கட்டாயப்படுத் தினால் நுகா்வோர் பாதுகாப்பு துறைக்கு அல்லது நுகர்வோர் அமைப்புக்கு உடனே புகார் அளிக்க வேண்டும். உணவுப் பொருள்களை பாக்கெட்டுகளில் வாங்குவோர் அதன் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, விலை ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
திருப்பூரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை இருவரை பெங்களூரு அழைத்துச் சென்றனர்
திருப்பூர், பிப்.15- திருப்பூர் மாநகரில் இரு வேறு இடங்க ளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி இரண்டு பேரை விசார ணைக்காக பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். திருப்பூர் மாநகரம் கொங்கு மெயின் ரோடு ராமு காலனி இரண்டாவது வீதியில் உள்ள ஒரு வீட்டிலும், நல்லூர் அருகே திருநக ரில் உள்ள ஒருவரது வீட்டிலும் புதன்கிழமை அதிகாலை தேசிய புலனாய்வு முகமை அதி காரிகள், உள்ளூர் காவல்துறையினருடன் வருகை தந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் ராமு கால னியில் இருந்து முகமது ரிஸ்வான் (40) என்பவ ரையும், திருநகரில் இருந்து சிக்கந்தர் பாஷா (42) என்பவரையும் அவர்கள் விசாரணைக் காக பெங்களூருக்கு அழைத்துச் சென்ற னர். கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்ப வம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் செல்போன் தகவல் தொடர்பை ஆய்வு செய்த தன் அடிப்படையில் திருப்பூரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மேற்கொண்ட சோதனையின் முடிவில் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். குக்கர் வெடிகுண்டு சம்பவம் தொடர் பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்காக இருவரையும் என் ஐ ஏ அதிகாரிகள் பெங்க ளூருக்கு அழைத்துச் சென்று இருப்பதாக வும் மாநகர காவல் துறை வட்டாரத்தினர் தெரி வித்தனர்.
பி.எப். பங்களிப்பை செலுத்தாமல் நிறுத்தும் கம்பெனிகள்
திருப்பூர், பிப்.15- திருப்பூரில் பின்னலாடைத் தொழில் துறையினர் கடும் நெருக்க டியைச் சந்தித்து வரும் நிலையில் சில பனியன் கம்பெனிகள், தொழிலாளர் களுக்கான வருங்கால வைப்பு நிதித் (பிஎப்) திட்டத்தில் நிர்வாகத் தரப்பில் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை செலுத்தாமல் நிறுத்தி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் குறித்து விசாரிப்ப தற்கு வருங்கால வைப்பு நிதி அலு வலகம் மூன்று தனி குழுக்களை அமைத்து ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்களில் தணிக்கையில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து போதிய ஆர்டர்கள் இல் லாத நிலையில், பின்னலாடை ஏற்று மதி நிறுவனங்கள் செயல்பாடு கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிஎப் திட்டத்தில் திருப்பூரில் 5 ஆயிரத்துக் கும் மேற்பட்ட நிறுவனங்களில் 2 லட் சத்து 83 ஆயிரம் தொழிலாளர்கள் சந் தாதாரர்களாக பதிவு செய்யப்பட்டுள் ளனர். இதில் 90 சதவிகிதத்துக்கு மேற் பட்டவை பனியன் தொழில் சார்ந்த நிட்டிங், காம்பேக்டிங், பிளீச்சிங் உள் ளிட்ட நிறுவனங்கள் ஆகும். இது தொடர்பாக செய்தியாளர் களிடம், சதீஷ் என்ற ஆயத்த ஆடை நிறுவன நிரந்தரத் தொழி லாளி கூறுகையில், நான் ஒரு ஏற்று மதி நிறுவனத்தில் நிரந்தரத் தொழி லாளியாக ரூ.17 ஆயிரம் மாத ஊதி யம் வாங்கி வருகிறேன். எனது பிஎப் பங்களிப்புத் தொகையாக ரூ. 540 செலுத்துகிறேன். நிர்வாகத்தினரும் அதே அளவு தொகையை பங்களிப் பாக செலுத்துகின்றனர். எனினும் நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு போதுமான ஆர்டர் கள் வரவில்லை. எனவே வேலை செய்வோர் எண்ணிக்கையை நிர்வா கம் குறைத்துவிட்டது. கடந்த எட்டு ஆண்டுகளில் நான்கு ஏற்றுமதி ஆர் டர்கள் மட்டுமே பெற்றோம். வழக்க மான கால கட்டத்தில் இதே கால அள வில் 20 ஆர்டர்கள் வரை பெற்றி ருப்போம். ஏறத்தாழ 80 சதவிகிதம் அளவுக்கு ஏற்றுமதி ஆர்டர் வேலை குறைந்துவிட்டது. இதனால் எங்கள் நிறுவன உரிமையாளர் கடும் நெருக் கடியில் சிக்கி, மாத சம்பளம் கொடுப் பதை காலதாமதம் செய்யும் நிலை ஏற்பட்டது. அத்துடன் கடந்த ஆறு மாத காலமாக எங்களுக்கு உரிய பிஎப் பங்களிப்புத் தொகை செலுத்து வதையும் நிறுத்தி விட்டது தெரிய வந்தது. உலகளாவிய நெருக்கடி, உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக ஏற்றுமதி ஆர்டர் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது, இதனால் இங் குள்ள பின்னலாடை துறையினர் கடும் சிரமத்தைச் சந்திப்பதாக உற் பத்தியாளர் தரப்பில் கூறினர். பிஎப் பங்களிப்புத் தொகை நிறுத் தம் குறித்து புகார்கள் வந்திருக்கும் நிலையில், பிஎப் அலுவலகம் இப்பி ரச்சனை குறித்து ஆய்வு செய்ய மூன்று குழுக்கள் அமைத்திருப்பதா கவும், பிஎப் பங்களிப்புத் தொகை செலுத்தாத நிறுவனங்கள் குறித்து கணக்கெடுத்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:42.15/60அடி நீர்வரத்து:817கன அடி வெளியேற்றம்:853கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:64.90/90அடி.நீர்வரத்து:66கனஅடி வெளியேற்றம்:806கனஅடி
அவிநாசியில் நாளை மின் தடை
அவிநாசி,பிப்.15- அவிநாசி மின்கோட்டம் கருவலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார சாதனங்கள் பராம ரிப்பு பணிகள் பிப்.17. ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, கருவலூர் அரசப் பம்பா ளையம், நைனாம்பா ளயம், ஆரியக்கவுண்டன் பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபா ளையம்,உப்பிலி பாளையம், மணப்பாளை யம், காரைக்கால்பாளை யம், முறியாண்டம்பாளை யம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லம்பாளையம் ஆகிய ஊர்களில் பிப்.17.ஆம் தேதி காலை 9 மணியிலி ருந்து மாலை வரை மின்சார விநியோகம் தடைபடும் என அவிநாசி கோட்ட செயற் பொறியாளர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றம்
ட்டது. நாமக்கல் நகர்மன்றக் கூட்டம் தலைவர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில், நகராட்சிக்கு தற் போது ஜேடர்பாளையத்தில் இருந்து புதிய குடிநீர் திட் டம் ரூ. 256.41 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு ஒருங் கிணைந்த நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. பழைய நகராட்சி பகுதி களை உள்ளடக்கிய 23 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைப்பு முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடுப் பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடி யில் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நாமக்கல் நகராட்சியின் சொந்த ஆண்டு வருமானம் ரூ.25.64 கோடியாகும். மேலும், இதர வரு மானங்கள் சேர்த்து மொத்தம் ஆண்டு வருமானம் ரூ.45.15 கோடி ஈட்டப்படுகிறது. நாமக்கல் நகராட்சி தற்போதைய பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நிலை யில் உள்ளது. எனவே, தற்போது உள்ள நகரின் பரப்ப ளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையிலும், நாமக்கல் மாவட்டத்தின் தலைநகரத்தில் அமைந்துள்ள, நாமக்கல் நகராட்சியினை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களை தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியுடன் இணைப்பதின் மூலமாக ஒருங்கி ணைந்த மாநகராட்சியாக மேம்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.பி., நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், நகராட்சி ஆணை யாளர் சுதா உள்ளிட்ட துணை தலைவர், வார்டு உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.
கோவையில் மகளிர் சுய உதவிக்குழுகள் கடன் தள்ளுபடி
கோவை, பிப்.15- கோவையில் 56 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.64 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் மக ளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது ஆட்சியர் பேசு கையில், கோவை மாவட்டத்தில் 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 நகர கூட்டு றவு கடன் சங்கங்கள், 4 கூட்டுறவு நகர வங்கிகள், துடி யலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் மற்றும் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு கிளைகள் மூலம் சுய உதவிக்குழு கடன் வழங்கி வருகின்றது. இந்நிலை யில், தமிழ்நாடு அரசு கடந்த 31.03.2021 அன்று நிலுவை யுள்ள சுய உதவிக்குழுக்கடன்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 2183 சுய உதவிக்குழுக்களில் 22699 எண்ணிக்கையிலான உறுப்பினர்களுக்கு ரூ.52.08 கோடி கடன் தொகை தள்ளு படி செய்யப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பார்த்திபன், துடியலூர் கூட்டுறவு சேவா ஸ்தாபன மேலாண் இயக்குனர் சிவக்குமார், மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இந்து மதி உட்பட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மின்தடை
நாமக்கல், பிப்.15- நாமக்கல் மாவட்டம், எரு மப்பட்டி துணை மின் நிலை யத்தில் வியாழனன்று (இன்று) மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங் காநத்தம், தோட்டமுடையாம் பட்டி, நவலடிப்பட்டி, பவித்தி ரம், தேவராயபுரம், முட்டான் செட்டி, வரதராஜபுரம், சிங்க ளம்கோம்பை, காவக்காரப் பட்டி, பவித்திரம்புதூர், செல் லிபாளையம், கஸ்தூரிப் பட்டி ஆகிய பகுதிகளில் வியாழனன்று (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத் தம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள் ளார்.