கிருஷ்ணகிரி, மார்ச் 14- ஓசூரில் நடைபெறும் 12வது புத்தகத் திருவிழாவை மக்கள் விழா வாக மாற்வோம் என்று வரவேற்புக் குழு தெரிவித்துள்ளது. ஓசூர் புத்தகத்திரு விழா வர வேற்புக் குழுக் கூட்டம் பரி மளம் பள்ளி வளாகத்தில் தலை வர் அறம் கிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்றது. செயலாளர் பால கிருஷ்ணன் வரவேற்றார். ஒருங்கி ணைப்பாளர் முனைவர் சேதுராமன் துவக்க உரையாற்றினார். 12ஆவது புத்தக திருவிழாவை ஜூலை 14 முதல் 25 வரை ஓசூர் ஹில்ஸ் ஹோட்டல் வளாகத்தில் நடத்துவது என்று இந்தக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த புத்தகத் திரு விழாவை மக்கள் பங்கேற்கும் விழா வாக மாற்ற வேண்டும் எனவும் புத்தகத் திருவிழா மதிப்புரு தலைவர் முனைவர் வணங்காமுடி கேட்டுக்கொண்டார். போதை பழக்கத்திற்கும், போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டியின் பதாகையை தேடல் ஆனந்த வெளி யிட்டார். ஓசூர் புத்தக திருவிழாக் கள் கடந்து வந்த பாதை பிர சுரத்தை சிவந்தி அருணாசலம் வெளியிட்டார். மாணவர்கள் மத்தியில் புத்தக திருவிழா செய்தியை கொண்டு செல்ல தபால் அட்டையை ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் நீலகண்டன், முனைவர் மணிமேகலை ஆகி யோர் வெளியிட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் சர்ஜான், செயலாளர் சந்தோஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.