கள்ளக்குறிச்சி, நவ. 28- மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயை தடுக்க கால்நடைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் சேந்தநாடு, வாணாம்பட்டு, கல்ல மேடு, கூ.கள்ளக்குறிச்சி, ஆரி நத்தம், ஒல்லியாம்பாளையம், தொப்பை யான்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்க ளில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் வந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அனைத்து கிராமங்களிலும் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நோய் பரவாமல் தடுக வேண்டும் என கட்சியின் திருநாவலூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.