கள்ளக்குறிச்சி, மார்ச் 14- சாராய வியாபாரிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பார் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுக்களை கொண்டு வந்தனர். ஆட்சியர் அலுவலக வாயி லில் ஒன்று திரண்டு முற்று கைப் போராட்டம் நடத்திய கிராம மக்களை காவல்துறை யினர் அங்கிருந்து கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது, விளம்பார் ஊராட்சியில் 20 வருடங்களாக ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகிறார்கள். தச்சூர், பெற்படாக் குறிச்சி, காட்டனந்தல், மலைக் கோட்டாலம், தென்கரனூர், வானவரெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து குடிமகன்கள் அதிகம் வருவதால் இப்பகுதியில் வாகன விபத்தும், தெரு சண்டைகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண்க ளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. சாராயத்தை குடித்து பல இளைஞர்கள் உயிரிழந்துள்ள னர். எனவே சம்பந்தப்பட்ட வர்களை காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வலி யுறுத்தினர். மேலும், கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் உரிய விசாரணை செய்து குற்ற வாளிகளை கைது செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.