districts

img

சாலை செப்பனிடும் பணி

 குழித்துறை, மார்ச் 8  குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு சாலையானது மிகவும் குண்டும் குழியுமாக பொதுமக்கள்  நடந்த கூட செல்ல முடியாத அளவில் மோசமாக காணப்பட்டது. இதை சீர் செய்ய சிபிஎம்  உட்பட பலர் கோரிக்கை வைத்தனர். தற்போது 52 லட்சம் செலவில் சாலை செப்பனிடும் பணி நகர் மன்ற தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமையில் துவங்கியது. நகர்மன்றத் துணைத் தலைவர் பிரவீன் ராஜா , நகர மன்ற உறுப்பினர் ரவி,விஜீ,ரத்தினமணி, ரீகன், ஆ ட்டிலின் கெனின் ,லில்லி புஷ்பம்,ரோஸ்லெட், ஜெயந்தி,சர்தார் ஷா, லலிதா, விஜயலட்சுமி, ஜெரி லாராணி,ஜூலியட் ,நகர்மன்ற ஆணையாளர் பொறியா ளர் மற்றும் ஒப்பந்தக்காரர் கலந்து கொண்டனர்.