court

img

காவல் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: 8 வாரத்திற்குள் விசாரணை முடிக்கப்படும்....

சென்னை:
சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னைஉயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி உயர் நீதிமன்றத்தில், “இதுவரை 87 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், கைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி பதிவுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. மேலும், “இன்னும் 8 வாரங்களுக்குள் விசாரணை முடிக்கப்படும்” என்றும் சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து சிபிசிஐடி சிறப்பு டிஜிபி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

;